Don't Miss!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஓரேயோரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- News கோயிலில் பிரார்த்தனை செய்து பிரசாரத்தை தொடங்கிய செஞ்சி மஸ்தான்.. டீ போட்டு வாக்கு சேகரித்தார்
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
பாரதிராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரி போலீசில் புகார்!
Recommended Video
சென்னை: ஆபாசமாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாகக் கூறி இயக்குநர் பாரதிராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வக்கீல் ராஜ்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: எனது தாய்மொழி தெலுங்கு. பல நூறு ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்டம் டி எடையார் கிராமத்தில் எங்கள் முதாதையர்கள் வசித்தனர்.
இப்போது எங்கள் குடும்பம் அங்குதான் வசிக்கிறது. இதுதான் எங்கள் மண். இயக்குநர் பாரதிராஜா ஒரு பேட்டியில், 'பிற மொழி பேசுவோர் தமிழகத்துக்கு வரலாம். போகலாம். நடிகர்களாக இருந்தால் சினிமாவில் நடிக்கலாம். ஆனால் தமிழகத்தையே ஆள நினைப்பது தவறு.
தமிழகத்திலேயே பிறந்து இருந்தாலும் பிற மொழி பேசுவோர், தமிழகத்தை ஆள விட மாட்டோம்.
ரஜினிகாந்த் உள்பட யாராக இருந்தாலும் அவர்களுக்கு இது பொருந்தும்' என்று பேசியுள்ளார்.
பாரதிராஜாவின் பேச்சு இந்திய இறையாண்மைக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது. ஆபாசமாகவும் பேசியுள்ளார். எனவே அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்."
இவ்வாறு புகார் மனுவில் அவர் கூறியுள்ளார். இந்தப் புகாரை கமிஷனர் அலுவலகம் பெற்றுக் கொண்டுள்ளது.