Don't Miss!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பாரதிராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரி போலீசில் புகார்!
Recommended Video
சென்னை: ஆபாசமாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாகக் கூறி இயக்குநர் பாரதிராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வக்கீல் ராஜ்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: எனது தாய்மொழி தெலுங்கு. பல நூறு ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்டம் டி எடையார் கிராமத்தில் எங்கள் முதாதையர்கள் வசித்தனர்.
இப்போது எங்கள் குடும்பம் அங்குதான் வசிக்கிறது. இதுதான் எங்கள் மண். இயக்குநர் பாரதிராஜா ஒரு பேட்டியில், 'பிற மொழி பேசுவோர் தமிழகத்துக்கு வரலாம். போகலாம். நடிகர்களாக இருந்தால் சினிமாவில் நடிக்கலாம். ஆனால் தமிழகத்தையே ஆள நினைப்பது தவறு.
தமிழகத்திலேயே பிறந்து இருந்தாலும் பிற மொழி பேசுவோர், தமிழகத்தை ஆள விட மாட்டோம்.
ரஜினிகாந்த் உள்பட யாராக இருந்தாலும் அவர்களுக்கு இது பொருந்தும்' என்று பேசியுள்ளார்.
பாரதிராஜாவின் பேச்சு இந்திய இறையாண்மைக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது. ஆபாசமாகவும் பேசியுள்ளார். எனவே அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்."
இவ்வாறு புகார் மனுவில் அவர் கூறியுள்ளார். இந்தப் புகாரை கமிஷனர் அலுவலகம் பெற்றுக் கொண்டுள்ளது.