twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கடல் படத்தில் ஏசு படத்துக்கு அவமரியாதை - மணிரத்னம் மீது போலீசில் புகார்!

    By Shankar
    |

    Manirathnam
    சென்னை: கடல் படத்தில் இயேசு பிரானின் படத்தை போட்டு உடைப்பது போல காட்சி வைத்ததற்காக இயக்குநர் மணிரத்னம் மீது இன்று போலீஸ் கமிஷனரிடம் புகார் கூறியுள்ளார் இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் இயேசுமூர்த்தி.

    இதுகுறித்து இன்று அவர் சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் அளித்துள்ள புகார்:

    மணிரத்னம் இயக்கிய கடல் படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் கிறிஸ்தவர்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள் உள்ளன. பைபிள் கல்லூரியில் அரவிந்தசாமியும், அர்ஜுனும் மாணவர்களாக சேர்கின்றனர். அப்போது அண்ணனை சாத்தான் என்றும் தம்பியை ஏசு என்றும் சொல்வது போல் வசனம் உள்ளது.

    இன்னொரு காட்சியில் நாயகன் பிரசவம் பார்க்கிறான். அப்போது கையில் படும் ரத்தத்தை ஏசுவின் ரத்தம் என்கிறார். இவை கிறிஸ்தவர்களை நோகடிப்பவை ஆகும். அர்ஜுன் தன்னை சாத்தான் என கூறிக்கொள்கிறார். அவரது பெயர் பெர்க்மான்ஸ் என குறிப்பிடப்படுகிறது. பெர்க்மான்ஸ் என்பவர் கிறிஸ்தவ பாடகர் ஆவார்.

    ஏசுவின் படத்தை நாயகன் உடைப்பது போன்றும் காட்சி உள்ளது. கிளைமாக்சில் சாத்தான் ஜெயித்து விட்டது என்ற வசனம் வருகிறது. ஆண்டவர் மீது சத்தியம் என்ற வசனம் உள்ளது. கிறிஸ்தவர்களை புண்படுத்தும் இத்தகைய 6 காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும். மணிரத்னம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    English summary
    A Chritian Minority political outfit sued against Director Manirathnam for insulting Jesus in Kadl movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X