Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
சின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி
சென்னை: நடிகரும் இசையமைப்பாளருமான அம்ரீஷ் அக்டோபர் 15ஆம் தேதியன்று தனது 31ஆவது பிறந்த நாளை தன்னுடைய தாயார் நடிகை ஜெயசித்ரா வீட்டில் வெகு விமரிசையாக கொண்டாடினார். இந்த விழாவில் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அம்ரீஷ்க்கு வாழ்த்து கூறினார்.
நடிகை ஜெயசித்ரா தயாரித்து எழுதி இயக்கிய நானே என்னுள் இல்லை என்ற படம் மூலம் கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் அறிமுகப்படுத்தப்பட்டவர் அம்ரீஷ்.
அன்று இசையமைப்பாளராக தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கியவர் அடுத்தடுத்து, மொட்ட சிவா கெட்ட சிவா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், சார்லி சாப்ளின் 2, பொட்டு, சத்ரு போன்ற படங்களுக்கு இசையமைத்தார்.
அம்ரீஷ் இசையமைத்த சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம் பெற்ற ஏய்ய்... சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் இன்றைக்கும் ட்ரெண்டிங்கில் உள்ளது.
தற்போது, கர்ஜனை, யங் மங் சங், வீரமாதேவி, பரமபத விளையாட்டு, கா போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவரின் பிறந்தநாளை அவரது தாயார் கலைமாமணி நடிகை ஜெயசித்ரா இல்லத்தில் கடந்த அக்டோபர் 15ஆம் தேதியன்று பிரம்மாண்டமாக கொண்டாடினார்.
இந்த விழாவில் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அம்ரீஷ்க்கு வாழ்த்து கூறினார். தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ், டி.சிவா, நமிதா, இயக்குநர் சாய் ரமணி, இயக்குநர் ரத்னா சிவா, படத்தொகுப்பாளர் கிஷோர் ஆகியோரும் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.