Don't Miss!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி தேவி, நாகேஸ்வரராவுக்கு அஞ்சலி கூட்டம்!
சென்னை: மறைந்த நடிகை அஞ்சலிதேவி, நடிகர் நாகேஸ்வரராவ் ஆகிய இருவரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் சென்னை ராணி சீதை ஹாலில் நேற்று மாலை நடந்தது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், துணைத்தலைவர் விஜயகுமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்துக்கொண்டு அஞ்சலிதேவி-நாகேஸ்வரராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசினார்கள்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார், 'பிலிம் சேம்பர்' பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், பட அதிபர்கள் எடிட்டர் மோகன், சித்ரா லட்சுமணன், வாசுதேவன், 'கில்டு' தலைவர் ஹேம்நாக்பாபு, நடிகர் ராஜேஷ், நடிகைகள் ராதிகா சரத்குமார், நளினி, சத்யபிரியா, பாத்திமாபாபு, கவிஞர் பிறைசூடன், மற்றும் அஞ்சலிதேவியின் மகன்கள் சின்னாராவ், நிரஞ்சன்குமார் மருமகள்கள் விஜயலட்சுமி, பாரதிதேவி ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள்.