Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி தேவி, நாகேஸ்வரராவுக்கு அஞ்சலி கூட்டம்!
சென்னை: மறைந்த நடிகை அஞ்சலிதேவி, நடிகர் நாகேஸ்வரராவ் ஆகிய இருவரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் சென்னை ராணி சீதை ஹாலில் நேற்று மாலை நடந்தது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், துணைத்தலைவர் விஜயகுமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்துக்கொண்டு அஞ்சலிதேவி-நாகேஸ்வரராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசினார்கள்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார், 'பிலிம் சேம்பர்' பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், பட அதிபர்கள் எடிட்டர் மோகன், சித்ரா லட்சுமணன், வாசுதேவன், 'கில்டு' தலைவர் ஹேம்நாக்பாபு, நடிகர் ராஜேஷ், நடிகைகள் ராதிகா சரத்குமார், நளினி, சத்யபிரியா, பாத்திமாபாபு, கவிஞர் பிறைசூடன், மற்றும் அஞ்சலிதேவியின் மகன்கள் சின்னாராவ், நிரஞ்சன்குமார் மருமகள்கள் விஜயலட்சுமி, பாரதிதேவி ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள்.