Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி தேவி, நாகேஸ்வரராவுக்கு அஞ்சலி கூட்டம்!
சென்னை: மறைந்த நடிகை அஞ்சலிதேவி, நடிகர் நாகேஸ்வரராவ் ஆகிய இருவரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் சென்னை ராணி சீதை ஹாலில் நேற்று மாலை நடந்தது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், துணைத்தலைவர் விஜயகுமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்துக்கொண்டு அஞ்சலிதேவி-நாகேஸ்வரராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசினார்கள்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார், 'பிலிம் சேம்பர்' பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், பட அதிபர்கள் எடிட்டர் மோகன், சித்ரா லட்சுமணன், வாசுதேவன், 'கில்டு' தலைவர் ஹேம்நாக்பாபு, நடிகர் ராஜேஷ், நடிகைகள் ராதிகா சரத்குமார், நளினி, சத்யபிரியா, பாத்திமாபாபு, கவிஞர் பிறைசூடன், மற்றும் அஞ்சலிதேவியின் மகன்கள் சின்னாராவ், நிரஞ்சன்குமார் மருமகள்கள் விஜயலட்சுமி, பாரதிதேவி ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள்.