Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பரத் படத்துக்காக பாடிய காங்கோ நாட்டு ராப் பாடகர் யபாமா ஜோ!
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை காங்கோ நாட்டு ராப் பாடகர் யபாமா ஜோவைப் பாட வைத்துள்ளனர்.
இயக்குனர் கே பாலசந்தர் நல்லாசியுடன் ராஜம் புரொடக்ஷன்ஸ் சார்பில் புஷ்பா கந்தசாமி மற்றும் எஸ் மோகன் இணைந்து தயாரிக்கும் படம் 'ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி'. பரத் - நந்திதா ஜோடியாக நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு பழனி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி மற்றும் கேரளா போன்ற இடங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன. 555 படத்துக்கு இசையமைத்த சைமன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் கானா பாலா எழுதிய ஒரு பாடலுக்கு இன்னொருவர் பாடினால் புதுமையாக இருக்குமே என்று விரும்பினார் சைமன். எனவே, காங்கோ நாட்டைச் சேர்ந்த ராப் இசைக் கலைஞர் யபாமா ஜோ (YABAMA JO) -வை வைத்து "ஏழரை..." என்ற பாடலை பாட வைத்துள்ளார்.
யுகபாரதி எழுதிய "ஒண்ணுனா ரெண்டு..." என்ற பாடலை விஜய் ஆண்டனி பாடியுள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எல் ஜி ரவிச்சந்தர்.