twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தாசரி நாராயணராவின் மனைவி தாசரி பத்மா மரணம்

    By Shankar
    |

    Dasari Padma
    ஹைதராபாத்: பிரபல இயக்குநரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தாசரி நாராயணராவின் மனைவி தாசரி பத்மா நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 61.

    கடந்த 25-ந் தேதி அவர் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக, ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசமும், தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மரணம் அடைந்தார்.

    கணவர் தாசரி நாராயணராவ் மற்றும் 2 மகன்கள், ஒரு மகளுடன் வசித்து வந்தார்.

    தாசரி பத்மா, திரைப்பட தொழிற்சங்கங்களில் தலைவியாகவும், பட அதிபராகவும் இருந்தார். கணவர் தாசரி நாராயணராவ் இயக்கிய செய்த பல படங்களை அவரே தயாரித்தார். அவர் தயாரித்த 'தாரக பிரபு' என்ற தெலுங்கு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    சிவரஞ்சனி, மேகசந்தேசம், மஞ்சு, ஒசே ராமுலம்மா, கொண்டவீட்டி சிம்மாசனம் உள்பட ஏராளமான தெலுங்கு படங்களை அவர் தயாரித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகராகவும் திகழ்ந்தவர் தாசரி பத்மா.

    அவருடைய மறைவு தெலுங்கு பட உலகை அதிர்ச்சி அடைய செய்தது. தமிழக கவர்னர் கே.ரோசய்யா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரா காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொட்சா சத்யநாராயணா ஆகியோர் தாசரி பத்மாவின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து இரங்கல் செய்தி விடுத்துள்ளனர்.

    தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, மோகன்பாபு, பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் தாசரி வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

    English summary
    Film producer and Congress leader Dasari Padma, wife of well-known director and former Union Minister Dasari Narayana Rao, passed away at a private hospital here on Friday morning. She was 61 and is survived by husband, a daughter and two sons.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X