Don't Miss!
- News சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.. ஏற்புடையது இல்லை.. மோடியை நேரடியாக அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'சட்டப்படி குற்றம்' படம்: தேர்தல் அதிகாரியிடம் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. புகார்!
சென்னை: எஸ்ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் சட்டப்படி குற்றம் படத்தை எதிர்த்து, காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப் பெருந்தகை தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்துள்ளார்.
இதுகுறித்து செல்வபெருந்தகை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள புகார் மனு:
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சட்டப்படி குற்றம் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த படம் வருகிற விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில், ஒருசில அரசியல்களையும், கட்சித் தலைவர்களையும் உயர்த்தியும், சில கட்சிகளையும் சில கட்சித் தலைவர்களையும் தரம் தாழ்த்தியும் காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
பொதுமக்கள் மத்தியில் குறிப்பிட்ட சில கட்சிகளையும் கட்சித் தலைவர்களையும் பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் நோக்கில் இதுபோன்ற காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த படத்தின் கருத்தும், சில காட்சிகளும் தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் அமைந்து இருக்கின்றன. எனவே, அந்த படத்தைப் பார்த்துவிட்டு அதன் பிறகு ரிலீஸ் செய்ய அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பதை முடிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
-இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.