twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜாக்குலினை தவறாக சித்தரிக்காதீர்கள்... ஓப்பன் கடிதம் வெளியிட்ட மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர்

    |

    மும்பை : ஜாக்குலின் ஃபெர்ணான்டசை தவறாக சித்தரிக்க வேண்டாம். பரிசு பொருட்கள் கொடுத்ததால் அவருக்கு பண மோசடியில் தொடர்பு இருப்பதாக அர்த்தமில்லை என கான்மேன் சுரேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

    டில்லியில் தொழிலதிபரின் மனைவியை மிரட்டி பணம் பறித்த வழக்கில் சிக்கியவன் Conman சுகேஷ் சந்திரசேகர். ரூ.200 கோடி மோசடி வழக்கில் சுரேஷ் சந்திரசேகரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அவருடன் தொடர்பு இருப்பதாக பாலிவுட் நடிகை ஜாக்கலின் ஃபெர்ணாடசிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். ஆனால் விசாரணையின் போது தனக்கும் சுகேஷிற்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறி இருந்தார் ஜாக்குலின்.

    பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை இழந்த 5 டாப் நடிகர்கள் இவங்க தான் பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை இழந்த 5 டாப் நடிகர்கள் இவங்க தான்

    தீயாய் பரவி போட்டோக்கள்

    தீயாய் பரவி போட்டோக்கள்

    இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் சுகேஷுடன் ஜாக்குலின் மிக நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் சில சோஷியல் மீடியாக்களில் தீயாய் பரவியது. இது பற்றிய கூறிய ஜாக்குலின், இது போன்ற போட்டோக்களை பகிர வேண்டாம் என்று மட்டும் தான் வேண்டுகோள் விடுத்தாரே தவிர, அந்த போட்டோக்கள் பற்றி விளக்கமோ, மறுப்போ தெரிவிக்கவில்லை. ஜாக்குலினுக்கு பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்ததே சுகேஷ் தான் என கூறப்படுகிறது.

    நெருக்கடியில் சிக்கிய ஜாக்குலின்

    நெருக்கடியில் சிக்கிய ஜாக்குலின்

    இதனால் ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் ஜாக்குலினுக்கும் தொடர்பு இருக்கிறது. ஜாக்குலினுக்கு சுகேஷ் காஸ்ட்லியான பரிசுகளையும் வழங்கி உள்ளார் என்பது போன்ற தகவல்களை இந்த போட்டோக்கள் உறுதிப்படுத்துவதாக இருந்தன. இதனால் ஜாக்குலினுக்கு நெருக்கடி அதிகரிக்கும் என கூறப்பட்டது.

    சுகேஷ் வெளியிட்ட கடிதம்

    சுகேஷ் வெளியிட்ட கடிதம்

    இந்நிலையில் தனது வக்கீல் மூலம் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளா சுகேஷ் சந்திரசேகர். அதில், ஜாக்குலினுடன் தான் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியானது தொடர்பாக அதிருப்தியை தெரிவித்துள்ளார். அதோடு, இதுபோன்ற தனிப்பட்ட போட்டோக்களை வெளியிடுவது தனியுரிமை மீறல் ஆகும். எனக்கும் ஜாக்குலினுக்கும் உறவு இருப்பது உண்மை தான். ஆனால் ஜாக்குலினிற்கு பரிசுகள் வழங்கியது காதலுக்கு அப்பாற்பட்டது.

    ஜாக்குலினுக்கு தொடர்பில்லை

    ஜாக்குலினுக்கு தொடர்பில்லை

    இரு நபர்களுக்கு இடையேயான உறவு என்பது எதை எதிர்பார்த்து இருப்பது இல்லை. தயவு செய்து ஜாக்குலினை தவறாக சித்தரிப்பது நிறுத்தும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற போட்டோக்களை பகிர்வதை நிறுத்துங்கள். ஜாக்குலினிற்கும் பண மோசடி வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என நான் ஏற்கனவே கூறி விட்டேன். நான் அவருக்கு பரிசுகள் வழங்கியது. அவரது குடும்பத்திற்கு செய்தவை அனைத்தும் காதலிப்பவர்களுக்காக செய்யும் சாதாரண ஒன்று தான். இதை பெரும் பேரத்துடன் எப்படி தொடர்புபடுத்தி பேசுகிறார்கள் என எனக்கு புரியவில்லை.

    சட்டப்படி நிரூபிப்பேன்

    சட்டப்படி நிரூபிப்பேன்

    இந்த பெரும் குற்றம் என்கிறார்கள். ஆனால் நடந்த டீல் அனைத்தும் சட்டப்படி தான் நடந்தது என்பதை மிக விரைவில் சட்டப்படி நிரூபிப்பேன். இதை தவறான பாதையில் எடுத்துச் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். ஜாக்குலின் மீது எந்த தவறும் இல்லை என குறிப்பிட்டுள்ளார் சுகேஷ்.

    English summary
    Conman Sukesh chandrasekar released a letter through his lawyer today. In that letter he requested that don't potray jacqueline as wrong person. she had no connection with this deal. don't shared our private photos.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X