Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தெறி டீசருக்கு எதிராக பெரும் சதி!- கொதிக்கும் இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் தாணு
மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வரும் தெறி டீசருக்கு எதிராக பெரும் சதி நடந்துள்ளது. அதனை விரைவில் வெளிப்படுத்துவோம் என படத்தின் இயக்குநர் அட்லீ மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளனர்.
விஜய் நடிப்பில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படமாக அமைந்துள்ள தெறி டீசர், பெரும் தாமதத்துக்குப் பிறகு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது.
வெளியான 12 மணி நேரத்தில் 1 மில்லியன் பேர் இந்தக டீசரைப் பார்த்து ரசித்த நிலையில் திடீரென டீசரை தூக்கியது யுட்யூப். காப்பிரைட் பிரச்சினையால் டீசர் நீக்கப்பட்டதாக காரணம் கூறியது.
ஆனால் சிறிது நேரத்தில் டீசர் மீண்டும் பார்வைக்குக் கிடைத்தது.
இது பற்றி இயக்குநர் அட்லியிடம் கேட்டபோது, "வெளியிட்டதிலிருந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் டிரெய்லரை யாரோ சதி செய்து அகற்ரியிருக்கிறார்கள். அது யாரெனக் கண்டுபிடிக்கும் வேலைகள் நடக்கின்றன," என்றார்.
படத்தயாரிப்பாளர் தரப்பில் கேட்டபோது, "யாரோ வேண்டுமென்றே காப்புரிமை கேட்டு இவ்வாறு செய்துள்ளனர். அந்த சதியை உடைத்து ட்ரைலரை மீண்டும் போட்டுவிட்டோம். அப்படிச் செய்தவர்களை சும்மா விட முடியாது," என்றார்.