Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தொடர் உடலுறவு கொரோனா வைரஸை கொல்லும்.. அள்ளிவிட்ட சர்ச்சை நடிகை.. அடித்துத் தூக்கிய ஃபேஸ்புக்!
சென்னை: தொடர்ந்து உடல் உறவு கொள்வது கொரோனா வைரஸை கொல்லும் என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஸ்ரீரெட்டி பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பல இயக்குநர்களும் நடிகர்களும் தன்னை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறினார்.
தெலுங்கு திரைத்துறையினர் மட்டுமின்றி தமிழ் திரைத்துறையினர் மீதும் பகீர் குற்றச்சாட்டுக்களை கூறினார். இயக்குநர் ஏஆர் முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டுக்களை கூறினார்.
வச்சு செய்யும் நடிகை
சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வரும் நடிகை ஸ்ரீரெட்டி, தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் பலர் மீது குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். மேலும் தனக்கு ஆகாதவர்கள் குறித்து தரக்குறைவாக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் பவன் கல்யாண், நடிகர் விஷால், நடிகர் நானி உள்ளிட்டோரை வச்சு செய்து வருகிறார்.
எப்படி இவ்வளவு பணம்?
இயக்குநர் மிஷ்கின் - விஷால் பிரச்சனையில் தலையிட்ட ஸ்ரீரெட்டி, விஷால் நீங்கள் எப்படி இவ்வளவு பணம் சம்பாதித்தீர்கள் என கேட்டு வம்பிழுத்தார். மேலும் என்னுடைய ஆதரவு எப்போதும் இயக்குநர் மிஷ்கினுக்குதான் என்றும் கூறி சம்மனே இல்லாமல் அவர்களுக்கு இடையிலான பிரச்சனையில் ஆஜரானார்.
இழிவான கருத்து
இதேபோல் பவன் கல்யாணையும் தொடர்ந்து வம்பிழுத்து வருகிறார். பவன் கல்யாண் வீட்டில் வெளிநாட்டு பெண்ணை வைத்திருக்கிறார். அவருக்கு ஏன் இன்னும் கொரோனா வரவில்லை எனக்கேட்டு இழிவாக பதிவிட்டிருந்தார். அவ்வப்போது பொதுவான கருத்துக்களை பச்சையாக கூறி வருகிறார் ஸ்ரீரெட்டி.
டிஷ்யூ பேப்பர்
அந்த வகையில் இன்று தனது ஃபேஸ் புக் பக்கத்தில் அவர் பதிவிட்டிருக்கும் கருத்திலும் ஏழரையை கூட்டியிருக்கிறார். அதாவது, திருமணமான நபரை நீ காதலித்தால் உன் வாழ்க்கையில் நீ நரகத்தை அழைக்கிறாய் என்று அர்த்தம். அவர்கள் உன்னை டிஷ்யூ பேப்பர் போன்று பயன்படுத்திக் கொள்வார்கள் என பதிவிட்டுள்ளார்.
டிஷ்யூஸும் இஷ்யூஸும்
இதேபோல் மற்றோரு பதிவில் மனைவிக்கு சொத்துக்கள் கிடைக்கும்.. காதலிக்கு டிஷ்யூஸும் இஷ்யூஸும்தான்.. என்று பதிவிட்டுள்ளார். மேலும் #stupidgirls என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. அதோடு உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் குறித்தும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
நிலையான செக்ஸ்
அதாவது தொடர்ந்து நிலையான உடலுறவு கொள்வது கொரோனா வைரஸை கொல்லும், அது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார் ஸ்ரீரெட்டி. அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், இதுபோன்று எல்லாம் கிளப்பி விடாதீர்கள் என கூறியிருந்தனர்.
யார் நீக்கியது
ஆனால் அவரது அந்த பதிவு திடீரென நீக்கப்பட்டுள்ளது. அந்த பதிவுக்கான கமென்ட்ஸ்களும் நீக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொடர்பாக தவறான தகவலை கூறியதால் அவரது அந்த பதிவு நீக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதோடு ஸ்ரீரெட்டி பதிவிட்ட பல பதிவுகளும் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அவற்றை ஸ்ரீரெட்டியே நீக்கினாரா அல்லது ஃபேஸ்புக் நிர்வாகம் நீக்கியதா என்ற தகவல் வெளியாகவில்லை.