விஜய்யுடன் நடித்தபோதுதான் திரிஷா, ஷாஜகான் பட நடிகை ஆபாச வீடியோ வெளியானது.. பிரபலம் ஓபன்
சென்னை: நடிகை திரிஷா தமிழ் சினிமாவின் டாப் 3 நடிகைகளில் ஒருவராக ஜொலித்திக்கொண்டிருக்கிறார். அவர் இப்போது கருப்பு, விஸ்வம்பரா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இன்னும் சில நாட்களில் கருப்பு படமும், அடுத்த மாதம் விஸ்வம்பராவும் வரவிருக்கின்றன. இந்நிலையில் பத்திரிகையாளர் ஆர்.எஸ்.கார்த்திகேயன் என்பவர் நடிகை திரிஷா குறித்து பேசியிருக்கும் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கோலிவுட்டில் 2000களின் தொடக்கத்தில் ஹீரோயினாக அறிமுகமான திரிஷா இப்போது டாப் நடிகைகளில் ஒருவர். வயது 40க்கு மேல் ஆகியும் இளமையோடும், அழகோடும் இருப்பதால்தான் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைத்துவருகின்றன. அவரும் ஃபீல்டுக்கு வந்து இத்தனை வருடங்கள் ஆகியும்; இன்னமும் ஒவ்வொரு படத்தையும், முதல் படமாக நினைத்து சின்சியராக உழைக்கிறார் என்று அவருடன் பணியாற்றுவர்கள் தொடர்ந்து சொல்லிவருவது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைகள்தான் ஓவர்: அவரது கரியரை பொறுத்தவரை நல்லபடியாகவே இருக்கிறது. ஆனால் பெர்சனல் வாழ்க்கையில் அவரது பெயர் ரொம்பவே அடிபட்டிருக்கிறது. விஜய்யுடன் அவர் ஒரே ட்ரெஸ்ஸில் வந்ததுதான் அத்தனைக்கும் காரணம். திரிஷாவோ, விஜய்யோ இந்த விஷயத்தில் தங்கள் இமேஜ் உடைந்துவிட்டதே என்று கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது. திரிஷாவின் குளியல் வீடியோ வெளியானபோதுகூட அவரது பெர்சனல் கேரக்டரை இப்படி யாரும் அசிங்கமாக பேசியதில்லை என்பது கவனிக்கத்தக்கது.
பத்திரிகையாளர் பேட்டி: இந்நிலையில் திரிஷா, விஜய் குறித்து பத்திரிகையாளர் ஆர்.எஸ்.கார்த்திகேயன் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "விஜய் ஒரு மாதிரி சைக்கோவான கேரக்டர். ஜனநாயகன் பட லீக்கிற்கு எடிட்டர் மட்டும்தான் காரணமா?.. யாருடன் நடித்தபோது திரிஷாவின் ஆபாச வீடியோ வெளியானது. யாருடன் நடித்தபோது ஷாஜகான் பட நடிகை ரிச்சா பல்லோட்டின் ஆபாச வீடியோ வெளியே வந்தது. அனைத்தும் விஜய்யுடன் நடித்தபோதுதான். அவர் வெல்ல வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.
இதுவரை நடந்ததா?: அந்த எடிட்டர் பிரதீப் இதுவரை எத்தனை படங்களில் வேலை செய்திருக்கிறார். இப்படி லீக்காகியிருக்கிறதா? விஜய் சொன்னால் கேட்டுதான் ஆக வேண்டும். அவருக்கென்று ஒரு மாஸ் இருக்கிறது. இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் வேறு மாதிரி போகும். மனைவிக்கு கடன் கொடுத்ததாக யாராவது சொல்வாங்களா?.. விஜய்க்குள் ஒரு மிருகம் தூங்கிக்கொண்டு இருக்கிறது. கௌரி கிஷன் விஷயத்தில் நான் அந்த அம்மாவையே கேள்வி கேட்கவில்லை. நடிகரிடம்தான் கேட்டேன்.
அப்படி சொன்னார்கள்: ஆனால் நான் யார் என்னவென்றே தெரியாமல், அந்த பத்திரிகையாளர் பத்து வருடங்கள் முன்பு இதே மாதிரி ஒரு கேள்வியை கேட்டார். அவர் அழித்தொழிக்கப்பட வேண்டியவர் என்று நாசர் நடிகர் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிட்டார். நடந்தது என்னவென்றே அவர்களுக்கு தெரியவில்லை. அந்த நடிகையை தமிழச்சி மாதிரி வைத்து கொண்டாடுகிறார்கள். விஜய்யையும் கொண்டாடுகிறார்கள். நான் எந்தக் கட்சியையும் சாராதவர். விஜய்யின் ஆட்சி அமைந்தால் ஆறு மாதங்களிலிருந்து ஒரு வருடத்துக்கு மேல் இருக்காது. அவருக்கு நிர்வாகம் செய்ய தெரியாது" என்றார்.


Click it and Unblock the Notifications
