Don't Miss!
- News ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நகையை விற்று குதிரையை வாடகைக்கு எடுத்து வந்தேன்..10 ஆட்களை அழைத்து வந்தேன் கூல் சுரேஷ்!
சென்னை : பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு குதிரையில் வந்து மாஸ் என்ட்ரி கொடுத்த கூல் சுரேஷ்.
கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின்செல்வன்.
இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷி உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.
டெக்னிக்கலாக மிரட்டியதா பொன்னியின் செல்வன்?... Goosebumps மொமண்ட் கொடுத்த ஏஆர் ரஹ்மான்...
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 6ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ், இந்தி, மலையாளம்,கன்னடம், தெலுங்கு 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் இன்று உலகமெங்கும் ரிலீசானது. சோஷியல் மீடியா, ஊடகம் மற்றும் பொன்னியின் செல்வன் குறித்த பேச்சுதான்.
ப்ரோமோஷன் டூர்
அதிகாலை சிறப்பு காட்சியுடன் இன்று திரையரங்கில் குவிந்துள்ள மக்கள் ஆரவாரத்துடன் படத்தை ரசித்து வருகின்றனர். கேரளா, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் படத்தின் ப்ரோமோஷன் பணியில் படக்குழுவினர் முழுமூச்சாக ஈடுபட்டனர். இந்த பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் டூருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு கிடைத்தது.
குதிரையில் என்ட்ரி
பிரம்மாண்டமாக ரிலீசாகி இருக்கும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தை காண இன்று அதிகாலை தியேட்டருக்கு வந்த கூல் சுரேஷின் எண்ட்ரியை பார்த்து பலரும் வியந்து போனார்கள். ஏனெனில் அவர் மாஸாக குதிரையில் எண்ட்ரி கொடுத்தார். அதுமட்டுமின்றி கையில் வெந்து தணிந்தது காடு பொன்னியின் செல்வனுக்கு வணக்கத்த போடு என்கிற வாசகம் அடங்கிய பேனரையும் கையில் வைத்துக்கொண்டு மாஸ் என்ட்ரி கொடுத்தார்.
செயினை அடமானம் வைத்தார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், படம் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், தான் வந்த குதிரை பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் பயன்படுத்திய குதிரை என்றும் அந்த குதிரை வாடகைக்காக செயினை அடமானம் வைத்தாகவும் தெரிவித்துள்ளார்.