Don't Miss!
- News மோடி பேரணியின்போது மாணவர்கள் சீருடையுடன் நின்ற விவகாரம்.. பள்ளிக்கே சென்ற டீம்.. அதிரடி ஆக்ஷன்!
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
ரஜினி, விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான் மாஸ்ன்னு எப்படி சொல்லலாம்.. கூல் சுரேஷ் பேச்சு!
சென்னை: சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ள நிலையில், படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த கூல் சுரேஷ் பேசிய பேச்சு டிரெண்டாகி வருகிறது.
அனுதீப் கே.வி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் நடிப்பில் காமெடி கலந்த காதல் படமாக வெளியாகி உள்ளது பிரின்ஸ்.
தொடர்ந்து டாக்டர், டான் என ஆங்கிலத்திலேயே தலைப்பு வைத்து வரும் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் என மீண்டும் ஆங்கிலத்தில் தலைப்பு வைத்துள்ளார். ஆனால், D சென்டிமென்ட் இந்த முறை மிஸ்ஸிங்.
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் மொக்கையா?...ரசிகர்கள் கருத்து என்ன?
சிரிப்பு
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் இந்த தீபாவளிக்கு சிரிப்பு வெடியாக மாறி இருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வந்தாலும், ஜாலியாக சினிமாவை பார்ப்பவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சர்தார் படத்துடனான போட்டியில் யாருக்கு நாளை அதிக கலெக்ஷன் என்பதையும் வெயிட் பண்ணி பார்க்க வேண்டும்.
கூல் சுரேஷ் ஆஜர்
வெந்து தணிந்தது காடு படமே வெளியாகி விட்டது. ஆனால், இன்னமும் கூல் சுரேஷ் புதிய படங்கள் வந்தால் தியேட்டருக்கு முதல் நபராக ஆஜர் ஆகிவிடுகிறார். கூல் சுரேஷ் படத்தை பார்த்து விட்டு என்ன சொல்கிறார் என்பதை கேட்கவே ஒரு பெருங்கூட்டம் திரளத்தான் செய்கிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை பார்த்து விட்டு பேசிய பேச்சு டிரெண்டாகி வருகிறது.
ரஜினி, விஜய்க்கு அடுத்து
தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான் வசூல் மன்னன் என மதுரை அன்புச்செழியன் பிரின்ஸ் புரமொஷன் விழாவில் பேசியிருந்தார். இந்நிலையில், அந்த பாயிண்ட்டையே வைத்துக் கொண்டு கூல் சுரேஷ் பிரின்ஸ் படத்தின் FDFS பார்த்து விட்டு பேசியுள்ளார்.
மிஸ்டர் அன்புச்செழியன்
கூல் சுரேஷ் படத்தை பார்த்து விட்டு வெளியே வந்ததும் வழக்கம் போல ஏகப்பட்ட யூடியூப் சேனல்கள் அவரிடம் மைக்கை நீட்டின. ரஜினி, விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான் என மிஸ்டர் அன்புச்செழியன் நீங்க எப்படி சொல்லலாம் என பொடி வைத்து பேசிய கூல் சுரேஷ், பின்னர் நீங்கள் சரியாகத்தான் சொல்லி இருக்கீங்க என படத்துக்கான புரமோஷன் வேலையை செய்துள்ளார்.
மச்சான் சிவகார்த்திகேயன்
சிம்பு படத்துக்கு மட்டுமின்றி வெளியாகும் பல படங்களுக்கும் சென்று கூல் சுரேஷ் விமர்சிப்பது போல ஆதரவாகவே பேசி வருகிறார். மச்சான் சிவகார்த்திகேயன் தாறுமாறா நடிச்சிருக்கான்.. பிரின்ஸ் படத்தை கண்டிப்பா தீபாவளிக்கு குடும்பத்தோட பார்த்து கொண்டாடுங்க என கூல் சுரேஷ் பேசி உள்ளார்.