கட்டில் திரைப்படக்குழுவின் .. கொரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டி!
சென்னை : கட்டில் திரைப்படக்குழுவினர் கொரோனா விழிப்புணர்வு குறித்து கவிதைப்போட்டி நடத்த உள்ளனர்.
நமது மத்திய,மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , முழுக்க முழுக்க, மக்களிடம் அது சார்ந்த விழிப்புணர்வை மேலும் தூண்டும் விதமாக கட்டில் திரைப்படக்குழு, கொரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டியை அறிவித்திருக்கிறது.

12 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதி, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 31(2020) ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் அனுப்பவும். தேர்வுக்குழு முடிவே இறுதியானது உலகில் எந்த நாடுகளிலிருந்தும், அனைத்து வயதினரும், பங்கேற்கும் இப்போட்டியில் ஒருவர்
ஒரு கவிதை மட்டுமே அனுப்பலாம்.

முதல் பரிசாக 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசு : 15,000 ரூபாயும், மூன்றாம் பரிசு 10,000 ரூபாயும் வழங்கப்பபடும். ஆறுதல் பரிசாக 20 பேருக்கு கவிதை நூல்கள் வழங்கப்படும். மேலும், பிரபல கவிஞர்களை கொண்டு தேர்ந்தெடுக்கப்படும் சிறப்பான கவிதைகளுக்கு,
விரைவில் நடைபெற இருக்கும் கட்டில் திரைப்பட (AudioRelease) பாடல் வெளியீட்டு விழாவில் பரிசுதொகை காசோலையாக வழங்கப்படும் என்று இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு அறிவித்திருக்கிறார்.



Click it and Unblock the Notifications











