மிரட்டும் கொரோனா.. கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்திய லயோலா கல்லூரி மாணவர்கள்!
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ளும் வகையில் லயோலா கல்லூரி கலை இலக்கிய பிரிவு மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா வைரஸால் 31 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 3 லட்சத்து 79ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 6500க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் லயோலா கல்லூரியின் கலை இலக்கிய பிரிவு மாணவர்கள் சென்னை பெருநகர மாநகராட்சியுடன் சேர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

இதில் பறையாட்டம், சிலம்பம், கட்டைக்கால் நடனம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் கொரோனா விழிப்புணர்வு தொடர்பான நாடகம் மற்றும் பாடல்களும் இசைக்கப்பட்டன. சென்னை நகர வீதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பலரும் கண்டுகளித்தனர்.


Click it and Unblock the Notifications











