Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கொரோனா உதவி.. களத்தில் இறங்கிய தளபதி ரசிகர்கள்.. தினக் கூலிகளின் பட்டினியை போக்க மாஸ் நடவடிக்கை!
சென்னை: கொரோனா பாதிப்புக்காக, நடிகர் விஜய் ஏதும் வாய் திறக்கவில்லையே என்ற கேள்விகள் எழுந்து வரும் நிலையில், சத்தமில்லாமல் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலமாக பல உதவிகளை செய்து வருகிறார்.
Recommended Video
மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுக்கும் கோலிவுட் நடிகர்களில், நடிகர் விஜய்யின் பங்கு அளப்பறியது.
விஜய்யின் மக்கள் மன்ற நிர்வாகிகள் கொரோனா பாதிப்பால், பசியால் வாடும் கூலித் தொழிலாளிகளுக்காக 150 மூட்டை அரிசி வழங்கி உள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இந்தியாவில் வெறும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் கடந்த வாரம் வரை இருந்த நிலையில், தற்போது, 1205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 32 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
கொரோனாவை எதிர்க்க நாடு முழுவதும் லாக் டவுன் போடப்பட்டு இருந்தாலும், பலரும் அதை பின்பற்றாமல் வெளியே சுற்றித் திரிந்து கொரோனா வைரஸை பரப்பி வருகின்றனர்.
வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு சென்று மாட்டிக் கொண்ட பலர், நடை பயணமாக சொந்த ஊருக்கு பயணப்படும் சோகங்களையும் காண முடிகிறது.
கொரோனாவுக்கு எதிராக போராடும் மத்திய, மாநில அரசுகளுக்கு பல பிரபலங்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். அதிகபட்சமாக நடிகர் அக்ஷய் குமார் 25 கோடி நிதியளிக்க முன் வந்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் மக்கள் மன்ற நிர்வாகிகள், பல மாவட்டங்களில் முக கவசங்களை இலவசமாக வழங்குதல், தினக் கூலி வேலை செய்யும் தொழிலாளர்களின் பசியை ஆற்ற தலா 25 கிலோ எடை கொண்ட 150 அரிசி மூட்டைகளை இலவசமாக வழங்கி உள்ளனர்.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு, தங்களால் முயன்ற பல்வேறு உதவிகளையும் நடிகர் விஜய் தனது ரசிகர்கள் மூலமாக செய்து வருகிறார்.