Don't Miss!
- News தோளை தொட்ட சு.வெங்கடேசன்.. டக்னு திரும்பிய டாக்டர் சரவணன்.. பூரித்த மதுரை.. சபாஷ், இது போதுமே நமக்கு
- Automobiles ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
லாஸ்லியாவுக்கு இந்த நேரத்தில் இப்படியொரு சோதனை நடக்கக் கூடாது.. அப்பாவின் சடலத்தை பார்க்க முடியுமா?
சென்னை: கனடாவில் இருந்து மரியநேசனின் உடல் இலங்கைக்கு கொண்டு வருவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. லாஸ்லியாவால் மறைந்த தனது அப்பாவின் முகத்தை கடைசியாக பார்க்க முடியுமா? என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.
Recommended Video
லாஸ்லியாவின் அப்பாவின் திடீர் மரணம், அவரை ரொம்பவே நிலை குலைய செய்துள்ளது.
அதை விட கொரோனா காலம் என்பதால், இலங்கைக்கு சென்றாலும், 14 நாட்கள் குவாரண்டின் செய்யப்படுவார் என்கிற பகீர் தகவல் மிகப்பெரிய சோதனையாக மாறி உள்ளது.
10 ஆண்டுகள் பார்க்கல
இலங்கை செய்தி வாசிப்பாளர், பிக் பாஸ் தமிழ் 3வது சீசன் போட்டியாளர், தமிழ் சினிமாவின் அறிமுக நாயகி என ஏகப்பட்ட அறிமுகங்கள் லாஸ்லியாவுக்கு இருந்தாலும், இந்த உலகில் அவரை அறிமுகப்படுத்திய அவரது அப்பாவின் இறுதி அஞ்சலி நடப்பதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இருவரும் வேலை காரணமாக 10 ஆண்டுகள் சந்திக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா கொடூரம்
இந்த உலகத்தில் தனது கொடூரங்களை அரங்கேற்ற கொரோனா ஆரம்பித்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. லட்சக் கணக்கான உயிர்களை பலி வாங்கிய கொரோனா, லாஸ்லியாவின் வாழ்க்கையிலும் தற்போது கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கனடாவில் இருந்து மரியநேசன் உடலை கொண்டு வருவதிலும், லாஸ்லியா இலங்கைக்கு செல்வதற்கும் கொரோனா முட்டுக்கட்டையாக மாறி உள்ளது.
இலங்கையில் இறுதி அஞ்சலி
கனடாவில் பணிபுரிந்து வந்த லாஸ்லியாவின் தந்தை மரியநேசன், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக முதற் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது பூத உடலை இலங்கைக்கு கொண்டு வரும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடு பட்டு வருகின்றனர். இலங்கையில் தான் அவருக்கு இறுதி அஞ்சலி செய்ய வேண்டும் என்பதே குடும்பத்தினரின் விருப்பம்.
இலங்கைக்கு சென்றாலும்
நடிகை லாஸ்லியா இலங்கைக்கு செல்ல விஜய் டிவி உதவி வருகிறது. இலங்கைக்கு விரைந்து செல்லும் ஏற்பாடுகளை லாஸ்லியா செய்து வருவதாக, வனிதா விஜயகுமாரும் தெரிவித்துள்ளார். ஆனால், இலங்கைக்கு அவர் சென்றாலும், அப்பாவின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்வதில் மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது.
14 நாட்கள் ஆகும்
இலங்கைக்கு சீக்கிரமே விரைந்தாலும், கொரோனா காலம் என்பதால், 14 நாட்கள் குவாரண்டைனில் வைக்கப்பட்ட பின்னர் தான் லாஸ்லியாவால் அவரது வீட்டுக்கு செல்ல முடியும் என்கிற சூழல் உள்ளதாக லாஸ்லியாவுக்கு வேண்டப்பட்டவர் தகவல் தெரிவித்துள்ளார். அதனால், அப்பாவின் இறுதி அஞ்சலியில் அவரால் கலந்து கொள்ள முடியுமா? ஸ்பெஷல் பர்மிஷன் ஏதாவது கிடைக்குமா? என்பது தெரியாமல் குழம்பிப் போயுள்ளார் லாஸ்லியா.
-
ஏன் என்னிடம் சொல்லல.. ஃபேவரைட் இயக்குநரிடம் சண்டைக்கு சென்ற அஜித்.. இப்படியும் நடந்திருக்கா?
-
Maniratnam's Goat Life Review: எப்படி இது சாத்தியமாச்சு.. ஆடுஜீவிதம் படத்திற்கு மணிரத்னம் விமர்சனம்!
-
கணவனுக்கும் மனைவிக்கும் இதுல கூட போட்டியா?.. ராம்சரண் - உபாசனா சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?