Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
கொரோனா எதிரொலி.. தமிழ்நாடு முழுவதும் 990 தியேட்டர்கள் மூடப்பட்டன.. 19ம் தேதி முதல் ஷூட்டிங் ரத்து!
சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் 990 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.
சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.
சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த வைரஸ்.
எல்லையோர மாவட்டம்
இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றுக்கு வரும் 31 ஆம் தேதி தடை விதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு முதலில் எல்லையோர மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களை மூட உத்தரவிட்டது. இதையடுத்து எல்லையோரத்தில் உள்ள 16 மாவட்டங்களில் 395 தியேட்டர்கள் மூடப்பட்டன.
இரவு காட்சிகள்
இந்நிலையில் தமிழக அரசு, வரும் 31 ஆம் தேதி வரை தியேட்டர்களை மூட நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று தமிழகம் முழுவதும் உள்ள பல தியேட்டர்களில் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஒரு சில தியேட்டர்களில் இரவு காட்சிகள் நடந்தன. இருந்தாலும் ரசிகர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
990 தியேட்டர்கள்
இந்நிலையில், இன்று முதல் தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதுபற்றி தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் ஶ்ரீதரிடம் கேட்டபோது, 'அரசின் உத்தரவு படியும் மக்களின் உடல் நலத்தை கவனத்தில் கொண்டும் தியேட்டர்களை இன்று முதல் மூடியிருக்கிறோம். தமிழகம் முழுவதும் 990 தியேட்டர்கள் உள்ளன. அனைத்தும் மூடப்பட்டுவிட்டன' என்றார்.
தாராள பிரபு
இதன் காரணமாக, தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருந்த, துல்கர் சல்மான், ரிதுவர்மா நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஜீவாவின் ஜிப்ஸி, அசோக் செல்வன், ரித்திகா சிங் நடித்த ஓ மை கடவுளே, ஹரீஷ் கல்யான், விவேக், தான் ஹோப் நடித்துள்ள தாராள பிரபு, சிபிராஜ், ஷெரீன் கஞ்ச்வாலா நடித்துள்ள வால்டர் உட்பட படங்களைத் திரையிடுவது நிறுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம்
அதோடு இந்த வாரம் வெளியாவதாக இருந்த, காக்டெயில், காவல்துறை உங்கள் நண்பன், ஞானச் செருக்கு, சூடு உட்பட சில படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 19 ஆம் தேதி முதல், சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட உள்ளன. இதையடுத்து ஏப்ரல் மாதம் முதல் தியேட்டர்கள் மீண்டும் செயல்படும் என்று தெரிகிறது.