Don't Miss!
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- News சரியான "அடி" தந்த வேங்கைவயல் மக்கள்.. யாருமே ஓட்டுப்போடல..விழுந்தடித்து ஓடிய ஆபீசர்ஸ்.. இப்ப பாருங்க
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
ஒன் வேர்ல்ட் நிகழ்ச்சி.. ஷாருக்கானுக்கு நன்றி சொன்ன உலக சுகாதார அமைப்பு.. என்ன விஷயம் தெரியுமா?
மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு உலக சுகாதார அமைப்பு நன்றி கூறியுள்ளது.
கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வரும் சுகாதார பணியாளர்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்ட ஹாலிவுட் பிரபலங்கள் உடன் இணைந்து பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலர் ஒன் வேர்ல்ட் எனும் ஆன்லைன் லைவ் நிகழ்ச்சியை வீட்டில் இருந்தபடியே நேற்று வழங்கினர்.
'நீங்க அதை மிஸ் பண்றீங்க..நாங்க இதை மிஸ் பண்றோம்..' ஒவராக ஒல்லியான ஹீரோயினுக்கு ஃபேன்ஸ் அட்வைஸ்!
WHO எனும் உலக சுகாதார அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், தனது அதீத பங்கை ஆற்றிய பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரிசியஸ் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
Thank you @iamsrk for standing in solidarity with @WHO & @GlblCtzn, & for joining the One world, #TogetherAtHome programme tonight. In solidarity, we can keep the world safe! #COVID19 https://t.co/GyMtp9MoDp
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) April 19, 2020
சுமார் 8 மணி நேரம் ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் நடைபெற்ற இந்த லைவ் நிகழ்ச்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சியாக சுமார் 2 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் இந்த லைவ் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். இந்த லைவ் நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் வசூலை கொரோனா வைரஸுக்கு எதிராக மக்களை காக்கும் முனைப்பில் தங்கள் உயிரையும் தியாகம் செய்து போராடி வரும் சுகாதார பணியாளர்களின் நலனுக்காக வழங்க முடிவு செய்துள்ளனர்.
குளோபல் சிட்டிசன் நிறுவனம் WHO உடன் இணைந்து இந்த லைவ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கொரோனா கலவரத்தால் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டு இருக்கும் ஊரடங்கு நிலவரங்களையும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கொரோனா நோயாளிகளுக்கு அளித்து வரும் சிகிச்சைகளையும் மாண்டேஜ் வீடியோக்களாக ஒளிபரப்பி அந்த லைவ் கன்செர்ட்டை தொடங்கினர்.
நிகழ்ச்சியின் இறுதியாக செலின் டியோன், ஆண்ட்ரியா போசெல்லி, ஜான் லெஜெண்ட் மற்றும் லேடி காகா உள்ளிட்ட பிரபலங்கள் உலக மக்களுக்காக பிரார்த்தனை செய்தபடி இந்த இசை நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.