Don't Miss!
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சல்மான் கான் கம்பி எண்ணவேண்டும்.. மான் வேட்டை வழக்கில் தீர்ப்பு!
Recommended Video
ஜோத்பூர் : பாலிவுட் நடிகர் சல்மான் கானை கடந்த 19 வருடங்களாகச் சுற்றி வரும் மான் வேட்டையாடிய வழக்கில் இன்று ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சல்மான் கானை குற்றவாளி என அறித்துள்ளது ஜோத்பூர் நீதிமன்றம்.
கடந்த 1998-ம் ஆண்டு, ராஜஸ்தானில் நடைபெற்ற ஷூட்டிங்கின்போது, வனப் பகுதியில் அரிய வகை மான்களை நடிகர் சல்மான் கான் வேட்டையாடியதாகவும், அவர் வேட்டையாடும்போது நடிகர் சயீப் அலிகான் நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் உடனிருந்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. பல வருடங்களாக நடந்துவந்த இந்த வழக்கில், கடந்த 2007-ம் ஆண்டு நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஜோத்பூர் கிளை நீதிமன்றம் உத்தரவிட்டது.
சல்மான் கான் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கின் முழு விசாரணையும் முடிக்கப்பட்டு தீர்ப்பு இன்று வெளியாகும் என ஏற்கெனவே ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று காலை கூடிய ஜோத்பூர் நீதிமன்றத்தில், தொடர்புடைய நடிகர்கள் அனைவரும் நேரில் வந்து ஆஜராகினர். நடிகர் சல்மான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள சல்மான் கான் விரைவில் ஜெயிலில் அடைக்கப்படுவார் எனத் தெரிகிறது.