Don't Miss!
- News போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா, முடியாதா? உயர்நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் என்ன?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அய்யப்பனைத் 'தொட்ட' விவகாரம்: ஜெயமாலா மீதான வழக்கு தள்ளுபடி!
கடந்த 2006ம் ஆண்டு ஜுன் 16ந் தேதி சபரி மலையில் தேவ பிரசன்னம் என்னும் ஜோதிட நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை நடத்திய பிரபல ஜோதிடர் பரப்பனங்காடி உண்ணி கிருஷ்ண பணிக்கர், சபரிமலை கோவிலில் ஒரு பெண் நுழைந்ததாகவும், அதற்கு பரிகார பூஜைகள் நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
அதைத் தொடர்ந்து, கன்னட நடிகை ஜெயமாலா சபரிமலை தேவசம் அலுவலகத்துக்கு பேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பினார். அதில், அவர் 1986 ம் ஆண்டு சபரிமலை கோவிலுக்குள் புகுந்து அய்யப்ப சுவாமி சிலையை தொட்டு வணங்கியதாக கூறியிருந்தார்.
இது பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது. இதுகுறித்து குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டது. பெண்கள் அய்யப்பன் சந்நிதானத்துக்குள் நுழையக்கூடாது என்பது ஆகம விதி.
விசாரணையில், ஜோதிடர் உண்ணிகிருஷ்ண பணிக்கரும், நடிகை ஜெயமாலாவும் இணைந்து பப்ளிசிட்டிக்காக இந்த சதித் திட்டத்தைத் தீட்டியதாக தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து ஜோதிடர் பணிக்கர், அவரது உதவியாளர் ரெகுபதி, நடிகை ஜெயமாலா ஆகியோரை முறையே முதல், 2 வது மற்றும் 3 வது குற்றவாளியாக சேர்த்து பத்தனம் திட்டை ரான்னி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை ஜெயமாலா கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த 2007 ம் ஆண்டு ஜுன் 14 ந்தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2010 டிசம்பர் 13- ந் தேதி ரான்னி ஜுடிசியல் முதல் வகுப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சட்டப்படி, குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால் காலதாமதமாக 3 ஆண்டுகளுக்கு பிறகு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனால் இவ்வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதை விசாரித்த நீதிபதி தோமஸ் பி. ஜோசப், கோரிக்கையை ஏற்று, நடிகை ஜெயமாலா மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். ஜோதிடர் உண்ணிகிருஷ்ண பணிக்கர், அவரது உதவியாளர் ரெகுபதி ஆகியோர் மீதான வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.
-
இளையராஜா பயோபிக்.. வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் கேரக்டர்களில் நடிப்பவர்கள் இவர்களா?.. ஃபேன்ஸ் ஆச்சரியம்
-
Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
-
Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!