Don't Miss!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- News சித்ரா பவுர்ணமி 2024: சென்னை டூ திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்
- Finance டெஸ்லா-வை சீண்டும் சியோமி.. கடுப்பான எலான் மஸ்க்..!!
- Automobiles ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரூ 12 கோடி மில் அபகரிப்பு வழக்கில் சக்சேனாவுக்கு காவல் நீட்டிப்பு!
உடுமலையைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்குச் சொந்தமான ரூ. 12 கோடி மதிப்புள்ள பேப்பர் மில் அபகரிக்கப்பட்டது தொடர்பாக திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.
இது தொடர்பாக சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சக்சேனா, அய்யப்பன் ஆகியோர் உடுமலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 19-ந் தேதி (நேற்று) வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். காவல் முடிந்ததை தொடர்ந்து சக்சேனா, அய்யப்பன் இருவரும் நேற்று உடுமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இருவருக்கும் வருகிற 30-ந் தேதி வரை காவலை நீடித்து உடுமலை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி (பொறுப்பு) ஷர்மிளா உத்தரவிட்டார். அப்போது சக்சேனா, அய்யப்பன் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு வருகிற 23-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. காவல் நீடிப்பு செய்யப்பட்ட சக்சேனாவும், அய்யப்பனும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டனர். இன்று காலை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.