Don't Miss!
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Sports RR VS DC - பேட்ஸ்மேன்களை குறை சொன்ன ரிஷப் பண்ட்.. பவுலிங்கில் அந்த வீரரும் சொதப்பிவிட்டார் என குட்டு
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கொலை மிரட்டல் வழக்கு.. கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை.. மணிரத்னம் பட நடிகைக்கு பிடிவாரண்ட்
சென்னை: மாஜி நடிகை காயத்ரி சாய்க்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் எம் ஸ்வாமி மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார் முன்னாள் நடிகை காயத்ரி சாய்.
காயத்ரி சாய் மீது கொலை மிரட்டல் வழக்கை பத்திரிகையாளர் பிரகாஷ் எம் ஸ்வாமி தொடுத்த நிலையில், விசாராணைக்கு ஆஜராகாமல் தட்டிக் கழித்து வரும் காய்த்ரி சாயை கைது செய்து அழைத்து வர போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உங்க தலை எங்கன்னு கேட்ட ரசிகர்கள், விக்ரம் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவுடன் சீக்ரெட் சொன்ன காயத்ரி
அஞ்சலி படத்தில்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 1990ம் ஆண்டு வெளியான அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் நடிகை காயத்ரி சாய். மிஸ் சென்னை சோஷியல் ஆக்டிவிஸ்ட் ரன்னர் அப் ஆன இவர் சினிமாவில் ஃபேஷன் டிசைனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் எம் ஸ்வாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
புலனாய்வு கட்டுரை
சென்னையை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் எம் ஸ்வாமி(66). இவருக்கு எதிராக நடிகை காயத்ரி சாய்நாத்(55) என்பவர் பாலியல் குற்றச்சாட்டு கூறினார்.
நடிகையின் கணவர் வெளிநாட்டில் இறந்தது குறித்து பிரகாஷ் எம் ஸ்வாமி புலனாய்வு கட்டுரை வெளியிட்டதால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கொலை மிரட்டல்
இதையடுத்து தன் சமூக வலைதளத்தில் பிரகாஷ் எம் ஸ்வாமிக்கு எதிராக நடிகை காய்த்ரி சாய்நாத் கருத்துகளை பதிவிட்டதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. நடிகைக்கு எதிராக பத்திரிகையாளர் அளித்த புகாரில் பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகை முன் ஜாமின் பெற்றார்.
அவதூறு பரப்பினார்
பின் சமூக வலைதளத்தில் பத்திரிகையாளருக்கு எதிராக அவதுாறு கருத்துகளை நடிகை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இது தொடர்பான வழக்கு கடந்த முறை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சமூக வலைதளத்தில் தனக்கு எதிராக நடிகை பதிவிட்ட ஆபாசமான கருத்துகளை நீதிபதியிடம் பத்திரிகையாளர் சமர்ப்பித்தார். வழக்கு விசாரணையின்போது நடிகை ஆஜராகாமல் இருந்தார்.
பிடிவாரண்ட்
இந்த நிலையில் வழக்கு சைதாப்பேட்டை 23வது மாஜிஸ்திரேட் கெளதமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அனைத்து ஆவணங்களை பார்த்த நீதிபதி ஜாமினில் வெளிவரக்கூடிய கைது வாரண்ட் பிறப்பித்து காய்த்ரி சாய்நாத்தை நவம்பர் 7ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!