Don't Miss!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- News தாய் மடிக்கே திரும்பியதை போல ஃபீல் ஆகுது.. பாஜகவில் இணைந்த சுரங்க மன்னன் ஜனார்த்தன ரெட்டி நெகிழ்ச்சி
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ரூ. 60 லட்சம் வாடகை பாக்கி: பிரபல நடிகையை வீட்டை விட்டு வெளியேற்ற கோர்ட் உத்தரவு
பாரீஸ்: ரூ. 60 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ள நடிகை மல்லிகா ஷெராவத்தை வீட்டை விட்டு வெளியேற்றுமாறு பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சிரில் ஆக்சன்பேன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு பாரீஸில் வசித்து வருகிறார். அவர் பாரீஸில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் அவர் வசித்து வருகிறார்.
பணம்
மல்லிகா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். முன்பணமாக ரூ. 2 லட்சம் கொடுத்துள்ளார். வீட்டின் மாத வாடகை ரூ. 4 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.
உரிமையாளர்
வீட்டில் குடியேறுவதற்கு முன்பு கொடுத்த ரூ. 2 லட்சத்தோடு சரி. அதன் பிறகு மல்லிகா வாடகையே கொடுக்கவில்லை. அதனால் தான் நீதிமன்றம் சென்றேன் என்று வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
கணவர்
தங்களுக்கு பண பிரச்சனை இருப்பதாக நீதிமன்றத்தில் மல்லிகா, சிரில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மல்லிகா, சிரிலை வீட்டை விட்டு வெளியேற்றுமாறு பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பறிமுதல்
மல்லிகா, சிரில் வீட்டில் இருக்கும் பர்னிச்சர்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மல்லிகா மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.