Don't Miss!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- News மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
சிம்பு – ஹன்சிகா பட விவகாரம்...கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
சென்னை : காதல் பிரேக் அப் ஆன பிறகு சிம்புவுடன் ஹன்சிகா மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் 'மகா'. இது ஹன்சிகாவின் 50 வது படமும் கூட. தற்போது ஹன்சிகாவிடம் கைவசம் இருக்கும் ஒரே படமும் இது தான்.
அப்படி நடிக்கவே வாய்ப்புகள் வருகிறது.. ஆபாச நடிகராக மாற விருப்பமில்லை.. பிக் பாஸ் பிரபலம் பளிச்!
இந்த படத்தை யு.ஆர்.ஜமீல் இயக்கி உள்ளார். எக்ஸெட்ரா என்டர்டெயின்மென்ட் பேனரில் மதியழகன் இப்படத்தை தயாரித்துள்ளார். நாயகியை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
வழக்கு போட்ட டைரக்டர்
இந்நிலையில் தன்னை கேட்காமல் படத்தை முடித்து ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்து வருவதாகவும், தனது அனுமதியில்லாமல் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்றும் டைரக்டர் ஜமீல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
டைரக்டருக்கு உரிமையில்லை
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, படத்தின் உருவாக்கம், தலைப்பு உள்ளிட்ட எதிலும் இயக்குனருக்கு எந்த உரிமையும் இல்லை என ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார்.
நஷ்ட ஈடு வேணும்
அத்துடன் படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பாக டைரக்டர் ஜமீலுக்கு ரூ.5.5 லட்சம் சம்பளமாக கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த படத்திற்கு தனக்கு சம்பளம் மற்றம் நஷ்டஈடாக ரூ.10 லட்சம் தர வேண்டும் என ஜமீல் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
தடை விதிக்க முடியாது
இந்த படத்தை ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்ற ஜமீலின் கோரிக்கையையும் கோர்ட் நிராகரித்தது. மேலும் இந்த வழக்கின் விசாரணை ஜுன் 28 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இருதரப்பும் எழுத்துப்பூர்வமாக வாதங்களை சமர்பிக்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.