Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இயக்குநர் சுசி கணேசன் அவதூறு வழக்கு... லீனா மணிமேகலை கோரிக்கை... செசன்ஸ் கோர்ட் நிராகரிப்பு
சென்னை : ட்விட்டரில் இயக்குநர் சுசி கணேசன் மீது மீ டூ விவகாரத்தில் இயக்குநர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அவர்மீது வழக்கு தொடர்ந்த சுசி கணேசன், நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை வேறு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி லீனா மணிமேகலை வழக்கு தொடர்ந்திருந்தார்.
சுசி கணேசன் படத்தில் ஹீரோ வாய்ப்பு...குவிந்த வீடியோக்கள்
மீ டூ விவகாரம்
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு மீ டூ விவகாரத்தில் திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் மீது இயக்குநர் லீனா மணிமேகலை ட்விட்டர் பக்கத்தில் புகார் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சுசி கணேசன் மீது பல தரப்பினரும் விமர்சனங்களை பதிவு செய்தனர்.
சுசி கணேசன் வழக்கு
இதையடுத்து சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்தரேட் நீதிமன்றத்தில் லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குநர் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்ந்து சைதாப்பேட்டை ஒன்பதாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நான்கு மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாஜிஸ்திரேட்டை மாற்ற கோரிக்கை
இதனிடையே இந்த வழக்கை சைதாப்பேட்டை 9வது மாஜித்திரேட் மோகனாம்பாள் விசாரிக்கக்கூடாது என்றும் வேறு மாஜிஸ்திரேட் வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லீனா மணிமேகலை வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கு தாமதம் என குற்றச்சாட்டு
இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக வழக்கு விசாரணையை லீனா மணிமேகலை இழுத்தடித்து வருவதாக சுசி கணேசன் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. மேலும் வழக்கை தாமதப்படுத்தும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
உச்சநீதிமன்ற உத்தரவு
நான்கு மாதத்தில் வழக்கை முடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவும் சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து லீனா மணிமேகலை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மாஜிஸ்திரேட்டிற்கு எதிராக கூறி வழக்க மாற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளதாக அவரது வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.