twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகை பிரீத்தி ஜிந்தாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

    By Staff
    |

    Preety Zindha
    சண்டீகர்: சர்ச்சைக்குரிய விளம்பரம் தொடர்பாக பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் பிரீத்தி ஜிந்தா மற்றும் வாடியாவுக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் பகத்சிங் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் படங்கள் இடம் பெற்றன.

    முழுவதும் வியாபாரமாகிவிட்ட ஐபிஎல் கிரிக்கெட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படத்தை வைத்து விளம்பரம் செய்த பஞ்சாப் அணியின் செயலை பல தரப்பினரும் கடுமையாக கண்டித்தனர்.

    எனவே பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரித்தி ஜிந்தா இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

    இதனிடையே இந்த விளம்பரத்தை எதிர்த்து சண்டீகர் நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கு தொடர்பாக பிரீத்தி ஜிந்தா மற்றும் வாடியாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஏப்ரல் 2ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X