Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
'விசித்திரன்' டைட்டில் விவகாரம்.. இயக்குநர் பாலா, ஆர்.கே.சுரேஷுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னை: விசித்திரன் பட டைட்டில் விவகாரத்தில் இயக்குனர் பாலா, நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம், 'ஜோசப்'. 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை பத்மகுமார் இயக்கி இருந்தார்.
த்ரில்லர் படமான இதன் கதையை ஷஹி கபிர் எழுதினார். ஜோஜு ஜார்ஜ் படத்தைத் தயாரித்து, முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
பாண்டிராஜ் இயக்கும் படம்.. நடிகர் சூர்யா ஜோடியாக இந்த ஹீரோயின்தான் நடிக்கிறாராமே?
பி ஸ்டுடியோஸ்
அவரோடு திலீஷ் போத்தன், இர்ஷாத், மாளவிகா மேனன் உட்பட பலர் நடித்தனர். இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆகி இருக்கிறது. பிரபல இயக்குநர் பாலா, தனது பி ஸ்டுடியோஸ் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். மலையாளத்தில் இயக்கிய பத்மகுமார், தமிழிலும் இயக்கியுள்ளார்.
நீதிமன்றத்தில் வழக்கு
இந்தப் படத்துக்கு விசித்திரன் என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்நிலையில், இந்த டைட்டிலுக்கு தடை கோரி, சாலிகிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சென்னை மாநகர 14 வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
விசித்திரன்
நான் சி.எஸ்.கே. புரோடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். 2015-ம் ஆண்டு விசித்திரன் என்ற தலைப்பை தயாரிப்பாளர்கள் கில்டில் பதிவு செய்து, கடந்த மார்ச் மாதம் வரை புதுப்பித்து வந்துள்ளேன். இந்த தலைப்பைப் பதிவு செய்வதற்கு முன், யாராவது இந்த தலைப்பை பதிவு செய்துள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி உறுதி செய்த பின்பே எனக்கு இந்த தலைப்பு ஒதுக்கப்பட்டது.
இயக்குனர் பாலா
இந்நிலையில், அதே டைட்டிலை பயன்படுத்தி, பி ஸ்டுடியோ நிறுவனம் மூலம் இயக்குனர் பாலாவும், இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷூம் படம் தயாரித்து வருகின்றனர். மேலும் ஆர்.கே.சுரேஷ் அதில் நாயகனாகவும் நடித்துள்ளார். தான் பதிவு செய்துள்ள விசித்திரன் என்ற தலைப்பில் படத்தைத் தயாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.
வழக்கு தள்ளிவைப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பி ஸ்டுடியோ நிறுவனத்தின் உரிமையாளரான இயக்குநர் பாலா மற்றும் இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கை 25- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.