Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
'விசித்திரன்' டைட்டில் விவகாரம்.. இயக்குநர் பாலா, ஆர்.கே.சுரேஷுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னை: விசித்திரன் பட டைட்டில் விவகாரத்தில் இயக்குனர் பாலா, நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம், 'ஜோசப்'. 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை பத்மகுமார் இயக்கி இருந்தார்.
த்ரில்லர் படமான இதன் கதையை ஷஹி கபிர் எழுதினார். ஜோஜு ஜார்ஜ் படத்தைத் தயாரித்து, முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
பாண்டிராஜ் இயக்கும் படம்.. நடிகர் சூர்யா ஜோடியாக இந்த ஹீரோயின்தான் நடிக்கிறாராமே?
பி ஸ்டுடியோஸ்
அவரோடு திலீஷ் போத்தன், இர்ஷாத், மாளவிகா மேனன் உட்பட பலர் நடித்தனர். இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆகி இருக்கிறது. பிரபல இயக்குநர் பாலா, தனது பி ஸ்டுடியோஸ் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். மலையாளத்தில் இயக்கிய பத்மகுமார், தமிழிலும் இயக்கியுள்ளார்.
நீதிமன்றத்தில் வழக்கு
இந்தப் படத்துக்கு விசித்திரன் என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்நிலையில், இந்த டைட்டிலுக்கு தடை கோரி, சாலிகிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சென்னை மாநகர 14 வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
விசித்திரன்
நான் சி.எஸ்.கே. புரோடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். 2015-ம் ஆண்டு விசித்திரன் என்ற தலைப்பை தயாரிப்பாளர்கள் கில்டில் பதிவு செய்து, கடந்த மார்ச் மாதம் வரை புதுப்பித்து வந்துள்ளேன். இந்த தலைப்பைப் பதிவு செய்வதற்கு முன், யாராவது இந்த தலைப்பை பதிவு செய்துள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி உறுதி செய்த பின்பே எனக்கு இந்த தலைப்பு ஒதுக்கப்பட்டது.
இயக்குனர் பாலா
இந்நிலையில், அதே டைட்டிலை பயன்படுத்தி, பி ஸ்டுடியோ நிறுவனம் மூலம் இயக்குனர் பாலாவும், இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷூம் படம் தயாரித்து வருகின்றனர். மேலும் ஆர்.கே.சுரேஷ் அதில் நாயகனாகவும் நடித்துள்ளார். தான் பதிவு செய்துள்ள விசித்திரன் என்ற தலைப்பில் படத்தைத் தயாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.
வழக்கு தள்ளிவைப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பி ஸ்டுடியோ நிறுவனத்தின் உரிமையாளரான இயக்குநர் பாலா மற்றும் இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கை 25- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.