Don't Miss!
- News எம்பிக்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? வீடு முதல் ரயில் பயணம் வரை இலவசம்.. அசரவைக்கும் சலுகைகள்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கோவிட் ஒரு சாதாரண நோய் அல்ல. .எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை காண்கிறேன்.. கவுண்டமணி உருக்கம்!
சென்னை: கொரோனா ஒரு சாதாரண நோயல்ல என்றும் மக்கள் பாதுகாப்பாக வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
தமிழகத்தை பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்தப்படியே உள்ளது.
சில தளர்வுகள்
இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் இதுவரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது.
மாஸ்க் அணிய வேண்டும்
இந்நிலையில் வரும் திங்கள் கிழமை முதல் தளர்வுகளின்றி தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கவுண்டமணி உருக்கம்
அந்த வகையில் நகைச்சுவை நடிகரான கவுண்டமணியும் மக்கள் அவசியமின்றி வெளியே சுற்றக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் கவுண்டமணி.
சாதாரண நோய் அல்ல
அவரது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது, கோவிட் ஒரு சாதாரண நோய் அல்ல. எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை நான் காண்கிறேன். தயவுசெய்து உள்ளே தங்கியிருங்கள். தடுப்பூசி அல்லது ஏதேனும் அவசரநிலைக்கு மட்டும் வெளியே வாருங்கள்! என பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா பிரபலங்கள்
நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 467 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.