நகைக்கடையை திறக்க வந்த ஜான் ஆபிரகாம் விரலைக் கடித்த ரசிகை!

பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் கர்நாடக மாநிலம் மங்களூரில் நகைக்கடை ஒன்றை நேற்று திறந்து வைக்க வந்தார். அவர் வருவது அறிந்த ரசிகர்கள் கடை முன்பு கூடிவிட்டனர். ஜான் கடையைத் திறந்து வைத்துவிட்டு அந்த வளாகத்தை சுற்றிப் பார்க்கச் சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் அவரைப் பார்க்க முந்தியடித்தனர்.
அப்போது ஒவ்வொரு ரசிகரும் ஜானுடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர். அவரும் சளைக்காமல் கைகுலுக்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீர் என்று ஒரு ரசிகை அவரது விரலைப் பிடித்து கடித்துவிட்டார். உடனே அவர் வலி தாங்காமல் கத்திவிட்டு அந்த ரசிகையை தள்ளிவிட்டார். இதையடுத்து அவரது பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக அழைத்துச் சென்று காரில் ஏற்றி அங்கிருந்து சென்றனர்.
இது ஒரு புறம் இருக்க மறுபுறம் அநத ரசிகை ஹைய்யா, நான் ஜான் ஆபிரகாமை தொட்டுவிட்டேனே என்று குஷியாக கத்திவிட்டு ஓடினார்.
இப்படியும் ஒரு ரசிகை...!


Click it and Unblock the Notifications











