Don't Miss!
- News "உயர் ஜாதியினரிடம்" 41% ஆனால்.. முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
‘வேலை முடிஞ்சா கிளம்பிட வேண்டியது தான்’... தன் மரணம் பற்றி காலையிலேயே தம்பியிடம் சொன்ன கிரேஸி மோகன்!
பிரபல எழுத்தாளர் கிரேஸி மோகன் நெஞ்சுவலி காரணமாக இன்று காலமானார்.
Recommended Video
சென்னை: இன்று காலை தன் தம்பியிடம் எதேச்சையாக மரணம் பற்றி பேசியுள்ளார் கிரேஸி மோகன். ஆனால், மதியமே அது நிஜமாகி விட்டது சோகமான செய்தி.
தமிழ்க் கலையுலகில் சினிமா, நாடகம், தொலைக்காட்சித் தொடர் எனப் பன்முகத் திறமையாளராக விளங்கியவர் கிரேஸி மோகன். 66 வயதான அவர், இன்று மதியம் நெஞ்சுவலி காரணமாக சென்னை மருத்துவமனையில் காலமானார்.
அவரது இந்த திடீர் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவிற்கு நேரிலும், சமூகவலைதளங்கள் வாயிலாகவும் அவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
RIPCrazymohan:கமலுக்கு அள்ளி கொடுத்தீங்களே கிரேஸி மோகன்.. ரஜினிக்கு மட்டும் ஏன் கிள்ளி கொடுத்தீங்க?
இந்நிலையில், இன்று காலை கிரேஸி மோகன் தன் தம்பி பாலாஜியிடம் மரணம் பற்றி பேசியது எஸ்.வி.சேகர் மூலம் தெரியவந்துள்ளது. அப்போது, 'பாரதியார், விவேகானந்தர் இவங்க எல்லாம் குறைந்த வயசுலேயே செத்துப் போய்ட்டாங்கல்ல.. வந்த வேலை முடிஞ்சுடுச்சுன்னா போக வேண்டியது தான். வயசு எல்லாம் பார்க்க முடியுமா?' என கிரேஸி மோகன் கூறியதாக எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
அப்போது ஏதோ மனதில் பட்டதால் யதார்த்தமாக இப்படிப் பேசியுள்ளார் கிரேஸி மோகன். ஆனால், மதியமே அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்து விட்டார்.
இன்னும் சில காலம் இருந்து மக்களை சிரிக்க வைத்திருக்கலாமே என கிரேஸியின் மரணச் செய்தியைக் கேட்டு அவரது நண்பர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். ஆனால், கிரேஸி மோகன் தன் வேலை முடிந்து விட்டதாக நினைத்து விட்டார் போலும். அதனால் தான், அவர் விட்டுச் சென்ற வசனங்கள் காலம் தோறும் நம்மை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையில், அவர் கிளம்பி விட்டார்.