Don't Miss!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- News தலைகீழாக திரும்புதே.. விவசாயிகளுக்கு குஷி.. இனி "ஸ்பாட் ஆக்ஷன்".. தமிழக அரசின் புது அதிரடி வருகிறது
- Technology Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
RIPCrazymohan:கமலுக்கு அள்ளி கொடுத்தீங்களே கிரேஸி மோகன்.. ரஜினிக்கு மட்டும் ஏன் கிள்ளி கொடுத்தீங்க?
சென்னை: மறைந்த எழுத்தாளர் கிரேஸி மோகன் ரஜினியின் படங்களுக்கு அவ்வளவாக வசனம் எழுதியதில்லை என்ற குறை ரசிகர்களுக்கு உண்டு.
தமிழ் சினிமா வரலாற்றில் காமெடி என்ற பக்கத்தில் அழிக்க முடியாத பெயர் கிரேஸி மோகனுடையது. தனது நகைச்சுவையான பேச்சு மற்றும் எழுத்தால் பலரையும் சிரிக்க வைத்தவர்.
அதிலும் குறிப்பாக இவரின் வசனத்தில் கமல் நடித்த படங்கள் எல்லாமே சிரிப்பு சரவெடிகள் தான். கமலுடன் அதிக படங்களில் இவர் பணிபுரிந்துள்ளார். சதிலீலாவதி, மைக்கேல் மதனகாமராஜன், காதலா காதலா, அவ்வை சண்முகி என இந்தப் பட்டியல் நீளமானது.
ஆனால், கமலுக்கு காமெடியை அள்ளி அள்ளிக் கொடுத்தவர், ரஜினிக்கு ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் வசனம் எழுதியுள்ளார். அது சுந்தர்.சி இயக்கிய அருணாச்சலம் படம் தான்.
கிரேஸி மோகன் நெற்றியில் கைவைத்து பிரியாவிடை கொடுத்தோம்: கமல் உருக்கம்
பொதுவாகவே ரஜினி படங்களில் நகைச்சுவை தூக்கலாக இருக்கும். அருணாச்சலம் படத்திலும் பாம்பு காமெடியில் ஆரம்பித்து கிளைமாக்ஸ் வரை காமெடியால் நிறைந்திருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவந்த ரஜினியின் காமெடிப் படமாகவே அப்படம் பார்க்கப்பட்டது. ஆனால் ஏனோ ரஜினி, கிரேஸி மோகன் கூட்டணியில் அதிக படங்கள் வெளிவரவில்லை.
கிரேஸி மோகன் மறைவுச் செய்தியைக் கேட்டு துக்கத்தில் இருக்கும் ரசிகர்கள் அவரது பட வசனங்களைக் குறிப்பிட்டு அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.