Don't Miss!
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Automobiles ரேஸ் டிராக்கை தெறிக்கவிட்ட பைக் ரேஸர்கள்!!
- Finance ஸ்மால்கேப் முதலீட்டாளர்கள் காட்டில் மழை.. மொத்தம் 26 லட்சம் கோடி லாபமாம்..!!
- News ‘ஒலி வாங்கி’ கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை.. நாம் தமிழர் சீமான் வேதனை
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கிரிக்கெட்டெல்லாம் புட்டுக்கிச்சோ.. எல்லா பிளேயர்ஸும் நடிக்க வர்றாங்க!
Recommended Video
சென்னை: சினிமாவில் யார் வேண்டுமாலும் இப்ப நடிக்கலாம். அந்த வகையில் இப்போது கிரிக்கெட் வீரர்களும் நடிக்க வருகிறார்கள். அதுவும் அனைவரும் விரும்பும் தமிழ்ப் படங்களில்.
ஹர்பஜன் சிங் இப்போது நடிக்க வருகிறார். கார்த்திக் யோகி எடுக்கும் டிக்கிலோனா படத்தில்தான் அவர் நடிக்கப் போகிறார். இதில் சந்தானம்தான் ஹீரோ. 3 கெட்டப்பில் வருகிறாராம் சந்தானம். ஹர்பஜன் சிங் செம கோபக் காரர். கூடவே செமையாக காமெடியும் பண்ணுவார். ஜோக்கடிப்பார். எனவே சந்தானம் படத்தில் இவரை எப்படி காட்டப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்புக்குரிய ஒன்று.
அடுத்து விக்ரமுடன் ஒரு கிரிக்கெட் வீரர் இணைகிறார். அவர்தான் இர்பான் பதான். விக்ரம் 58 படத்தில் இவர் வருகிறார். இப்படத்தில் 10 கெட்டப்களில் நடிக்கவுள்ளார் விக்ரம். அஜய் ஞானமுத்து இதை இயக்குகிறார்.
இதேபோல முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த்தும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளது நினைவிருக்கலாம். கிரிக்கெட் களத்தில் அதகளப்படுத்திய இந்த 3 பவுலர்களும் சினிமாவில் எப்படி பட்டையைக் கிளப்புவார்கள் என்பது போகப் போக பாரக்கலாம்.
சரி பிகிலோடு மோதப் போகும் கைதி படம் எந்த அளவுக்கு அடித்து நொறுக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் பாடல் கிடையாது, ரொமான்ஸ் கிடையாது, காதல் கிடையாது.. எனவே படம் கதையை மட்டுமே நம்பி களம் குதிக்கிறது. லோகேஷ் கனகராஜின் இந்த திறமையை பார்த்துதான் விஜய் தனது அடுத்த படத்தை லோகேஷிடம் கொடுத்தாராம்.
எப்படியோ தமிழ் சினிமா நன்றாக இருந்தால் சரித்தான்.