Don't Miss!
- News பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீதான வழக்கு ரத்தா? ஒத்திவைத்த ஹைகோர்ட்
- Technology OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- Sports ஒரே ஓவர்.. 2 விக்கெட்டையும் தூக்கிய தமிழக வீரர்.. DC நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்த சந்தீப் வாரியர்!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
போதைக் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? கைது செய்யப்பட்ட நடிகையிடம் தீவிர விசாரணை!
இடுக்கி: போதைப் பொருள் விற்கும் கும்பலுடன் ஏற்பட்ட தொடர்பு பற்றி, கைது செய்யப்பட்ட நடிகையிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக, பெங்களூரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாற்றப்படுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேரம்? தீயாய் பரவும் தகவல்.. குழப்பத்தில் ரசிகர்கள்!
இந்த விவகாரத்தில் கர்நாடகாவில் சிலர் கைது செய்யப்பட்டனர். சினிமா துறையை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்
சஞ்சனா கல்ராணி
நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் சஞ்சனாவுக்கு சமீபத்தில் ஜாமீன் கிடைத்தது. பாலிவுட்டில் நடிகை ரியா சக்கவர்த்தி உட்பட சில பிரபலங்கள் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
சாரா அலிகான்
தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் உட்பட சில நடிகைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். போதைப் பொருள் வழக்கில் கேரளாவைச் சேர்ந்த சிலர் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக, கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் மகன் பினீஷ் கொடியேறி கைது செய்யப்பட்டார்.
அதிரடி ரைடு
இந்நிலையில், கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலைப்பிரதேசமான வாகமண் பகுதியின் ரிசார்ட் ஒன்றில் போதைப் பார்ட்டி நடப்பதாக கேரள கிரைம் பிராஞ்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கடந்த சில நாட்களுக்கு முன், அவர்கள் அங்கு அதிரடி ரைடு நடத்தினர். அதில் ஏழு வகையான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
நடிகர், நடிகைகள்
அங்கு மலையாள சினிமாவைச் சேர்ந்த சில நடிகர், நடிகைகள் வருவதாக இருந்தது.
ரைடு பற்றிய தகவல் சென்றதை அடுத்து அவர்கள் தப்பி விட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அங்கு கைப்பற்ற போதைப் பொருட்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டது என்று போலீசார் அறிந்தனர்.
பிரிஸ்டி பிஸ்வாஸ்
இதையடுத்து தொடுபுழாவைச் சேர்ந்த அஜ்மல் ஜாகீர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் வளர்ந்து வரும் நடிகை, பிரிஸ்டி பிஸ்வாஸ். இவர் சில மலையாளப் படங்களில் நடித்துள்ளார். மாடலிங் செய்தும் வருகிறார். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலிவுட் பிரபலங்கள்
இது, மலையாள சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஜ்மல் மற்றும் சல்மான் ஆகியோரிடம் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார் நடிகை பிரிஸ்டி. இதனால், வேறு சினிமா துறையினருக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா என்பது பற்றி அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
போதை பார்ட்டி
அதோடு பிரிஸ்டிக்கும் இவர்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது, பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர். நடிகை பிரிஸ்டி, ஏற்கனவே பல பகுதிகளில் இந்தக் கும்பல் நடத்திய போதைப் பொருட்கள் பார்ட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறார் என்றும் மாநிலத்துக்கு வெளியிலும் அவருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருவதாகக் கூறியுள்ளனர்.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?