Don't Miss!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக பிரகாஷ்ராஜ் மீது வழக்கு
பிரகாஷ்ராஜ் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது
பெங்களூரு: இந்துக்கள் மனம் புண்படும் விதமாக பேசியதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.
சமீப காலங்களாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இப்போது, இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக பேசியதாக பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கிரண் என்பவர் பிரகாஷ்ராஜ் மீது கிரிமினல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனுதாக்கல் செய்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் விஜயபுரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பசு குறித்து மோசமாக விமர்சித்ததாகவும், மேலும் பல இடங்களிலும் இந்துக்கள் குறித்து மோசமாக பேசியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
பிரகாஷ்ராஜ் சமீபத்தில் கோயம்புத்தூரில் நடைபெற்ற தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் புகழஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்தியில் பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் தட்கா என்ற படம் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழில் ராதாமோகன் இயக்கத்தில் அறுபது வயது மாநிறம் என்ற படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.