Don't Miss!
- News "முட்டாள்தனமா இருக்கே.." ரகுராம் ராஜன் சொன்ன பரபர கருத்து.. எல்லா பக்கமும் கிளம்பிய எதிர்ப்பு
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கோக்கை வைத்து சம்பவம் செய்த கிறிஸ்டியானோ ரொனால்டோ.. விஜய்யின் கத்தி படத்தை நினைவுப்படுத்துகிறதா?
சென்னை: கிறிஸ்டியானோ ரொனால்டோ கொகோ கோலாவை வச்சு செய்த சம்பவம் விஜய்யின் கத்தி படத்தை நினைவுப்படுத்துவதாக உள்ளது.
யூரோப்பியன் சாம்பியன்ஷிப் போட்டியை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்றார்.
மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்.. போனில் தொடர்பு கொண்டு வாழ்த்திய வைரமுத்து!
அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன்பாக தனது டேபிளில் வைக்கப்பட்டிருந்த கொகோ கோலா பாட்டிலை கேமரா ஃபிரேமுக்குள் வராதப்படி எட்டி தள்ளி வைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
பெரும் பரபரப்பு
மேலும் வாட்டர் பாட்டிலை எடுத்துக்காட்டி வாட்டர் என்று கூறியபடியே தனக்கு முன்னால் வைத்து செய்தியாளர் சந்திப்பை தொடங்கினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
30ஆம் கேடி இழப்பு
கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்த இந்த சம்பவத்தால் கொகோ கோலா நிறுவனத்திற்கு ஒரே நாளில் 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்த இந்த சம்பவம் கத்தி படத்தில் விஜய் செய்த சம்பவத்தை நினைவுப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் செய்த சம்பவம்
நடிகர் விஜய் 2000ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை கொகோ கோலா நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்தார். ஆனால் 2014ஆம் ஆண்டு அவர் நடித்த கத்தி படத்தில் கொகோ கோலா நிறுவனத்திற்கு எதிராக வசனம் பேசி தெறிக்க விட்டார்.
ஜீவானந்தம் கதாபாத்திரம்
இதுதொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் கோலா நிறுவனத்தை விமர்சிக்கவில்லை. ஜீவானந்தம் கதாப்பாத்திரமாகதான் கத்தி படத்தில் நடித்தேன் என விளக்கம் கூறினார் விஜய்.
ஏஆர் முருகதாஸ்
இந்நிலையில் இந்த சம்பவத்தைதான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் செயலும் நினைவுப்படுத்துவதாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கத்தி படம் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.