இரண்டாயிரம் ரூபாயில் சிப் வச்சாச்சு: இது வெறும் ட்ரெய்லர் தான் போல...
Recommended Video

சென்னை: இரண்டாயிரம் ரூபாயில் சிப் வச்சிருக்கோம் என்று இயக்குனர் சி.எஸ். அமுதன் தெரிவித்துள்ளார்.
500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்து இன்றோடு ஓராண்டாகிவிட்டது. மோடியின் இந்த அறிவிப்பால் மக்கள் படாதபாடு பட்டனர்.
வங்கி வாசல், ஏடிஎம் வாசலில் பல உயிர்கள் பரிதாபமாக போனது.

ரிசர்வ் வங்கி
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் சிப் இருப்பதாக அப்போது செய்திகள் வெளியாகின. சிப் எல்லாம் இல்லை அது வெறும் வதந்தி என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்தது.
சிப்
2 ஆயிரம் ரூபாய் நோட்டின் மீது ஒரு வாழைக்காய் சிப்ஸை வைத்து சிப் வச்சிருக்கோம் என புகைப்படத்துடன் ட்வீட்டியுள்ளார் இயக்குனர் சி.எஸ். அமுதன்.

கலாய்
தமிழ் படம் மூலம் பலரையும், பல விஷயங்களையும் மரண கலாய் கலாய்த்திருந்தார் அமுதன். இந்நிலையில் அவர் தமிழ் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்.

சிவா
தமிழ் படம் 2ல் சிவா நடித்துக் கொண்டிருக்கிறார். பண மதிப்பிழப்பு குறித்து மரண கலாய் காட்சிகள் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கப்பார்க்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











