Don't Miss!
- News
மறைந்தது குயில்..பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Lifestyle
உங்கள் தலைமுடியில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இது தான் எண்ட்கேமே.. சூர்யாவை தொடர்ந்து முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிய பிரபல இயக்குநர்!
சென்னை: கொரோனா போரில் வென்று மக்களை காப்பாற்ற வேண்டும் என இன்றும் வீடியோ ஒன்று வெளியிட்டு உலக தமிழர்களிடன் நிவாரண நிதி அளிக்கக் கோரி உள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
நடிகர் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி முதல்வரை நேற்றே நேரில் சந்தித்து ஒரு கோடி ரூபாய் நிதியை கொரோனா நிவாரணத்திற்கு வழங்கினர்.
ஷாங்காய் திரைப்பட விழாவில் சூர்யாவின் 'சூரரை போற்று'
இந்நிலையில், தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2, ரெண்டாவது படம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சி.எஸ். அமுதன் முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பியுள்ளார்.

முதல்வர் வேண்டுகோள்
கொரோனா இரண்டாம் அலையால் ஏகப்பட்ட மக்கள் பாதித்து வருகின்றனர். உரிய மருத்துவ வசதி கிடைக்காமலே பலர் உயிரிழக்கும் சோகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து உதவுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சூர்யா குடும்பம் உதவி
முதல்வரின் கோரிக்கையை ஏற்று பழம்பெரும் நடிகரான சிவகுமார் தனது மகன்கள் மற்றும் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தி உடன் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஒரு கோடி ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினர்.

இயக்குநர் அமுதன்
இந்நிலையில், சூர்யா குடும்பத்தை தொடர்ந்து இயக்குநர் சி.எஸ். அமுதன் தானும் முதல்வர் நிவாரண நிதிக்கு தன்னால் முடிந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளதாக ஸ்க்ரீன் ஷாட் உடன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இது தான் எண்ட்கேம்
அவெஞ்சர்ஸ் படத்தில் வருவது எண்ட்கேம் இல்லை. இதுதான் ரியல் எண்ட்கேம் என்பதை நெட்டிசன்களுக்கு உணர்த்தும் வகையில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் சி.எஸ். அமுதன். தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இவர்.

தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
கொரோனா நிவாரண நிதிக்கு மற்ற பிரபலங்கள் உதவ தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் மரணம் நிகழும் என காக்க காக்க பாடல் வரிகளை எல்லாம் போட்டு நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், தனிப்பட்ட முறையிலாவது மக்களுக்கு பெரிய அளவில் முன்னணி நடிகர்கள் உதவ முன் வரவேண்டும் என்ற கோரிக்கைகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.