Don't Miss!
- News
"தமிழகத்தில் களமிறங்கும் பிரதமர் மோடி?" எங்கு தெரியுமா! ஓபனாக பேசிய அண்ணாமலை! அதிமுக குறித்தும் பரபர
- Automobiles
புதிய இ-பைக்கிற்காக இத்தாலி நிறுவனத்தோட இணைந்த ஒகினவா... உலகளவில் 50 டெக்னீசியன்களையும் களமிறக்க திட்டம்!
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
”மேட்டர் தொடர்கிறது” நித்யானந்தாவை கிண்டலடித்த சி.எஸ். அமுதன்
சென்னை: ஐன்ஸ்டீனின் சமன்பாட்டிற்கு புதுவிளக்கம் கொடுத்த நித்யானந்தாவை கிண்டலடித்துள்ளார் சிஎஸ்.அமுதன்.
கிண்டலுக்கும் நக்கலுக்கும் பெயர் போனவர் இயக்குனர் சிஎஸ்.அமுதன். இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளியான தமிழ்ப்படம் 2 மாபெரும் வெற்றி பெற்றது.

இப்போது நித்யானந்தாவின் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், ஐன்ஸ்டினின் நிறை ஆற்றல் சமன்பாடு குறித்து விளக்கமளிக்கிறார். ஐன்ஸ்டினின் எம்சி ஸ்கொயர் ஃபார்முலாவில், எம்சி ஸ்கொயர் என்றால் என்ன? தீவிரத்திற்கும் தொடர்ச்சிக்கும் உள்ள வேறுபாடுதான் எம்சி ஸ்கொயர்.
None of you are picking on his really important assertion. “MATTER is continuous “ https://t.co/fv7Q849SJz
— C.S.Amudhan (@csamudhan) September 17, 2018
மேட்டர் மற்றும் ஆற்றல் என்றால் என்னவென்றால், மேட்டர் என்பது தொடர்ச்சியாக ஒரு விஷயத்தை செய்வது ஆற்றல் என்பது அதன் தீவிரத்தன்மை. இந்த செயல்பாடு குறுக்கு புத்தி உள்ளவர்களுக்கும், நேர்மறையாக சிந்திப்பவர்களுக்கும் வேறுபடும் என சில விஷயங்களை குறிப்பிடுகிறார்.
ஒருவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவை ரீட்வீட் செய்துள்ள சி.எஸ்.அமுதன்.. "அவர் சொல்ல வருவதை நீங்கள் யாருமே கவனிக்க வில்லை. மேட்டர் தொடர்கிறது" என குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலத்தில் செயல்படுதல் என்பதற்கு மேட்டர் என்ற அர்த்ததில் நித்தியானந்தா சொல்வதை அவர் கிண்டலடித்துள்ளார்.