Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாங்காக்கிலிருந்து வந்த நயனதாராவிடம் சென்னை சுங்க அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை
நயனதாரா இடையில் ஏற்பட்ட 2 காதல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சிக்கல்களிலிருந்து விடுபட்டு மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். தெலுங்கில் பிசியாக நடிக்க ஆரம்பித்துள்ள அவர் தமிழிலும் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் அவரும் அவரது மேனேஜர் ராஜேஷ் மற்றும் மேக்கப் மேனுடன் பாங்காக் போயிருந்தார்.அங்கு போன வேலையை முடித்து விட்டு மீண்டும் சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் நயனதாராவை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். மேலும் ராஜேஷை தனியாக கூட்டிச் சென்று இன்னொரு அறையில் வைத்து விசாரித்தனர். அவர்களின் சூட்கேஸ்களையும் முழுவதுமாக சோதனையிட்டனர். முக்கால் மணி நேரம் நயனதாராவிடம் விசாரணை நடந்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
முக்கால் மணி நேர விசாரணைக்குப் பின்னர் வியர்க்க விறுவிறுக்க நயனதாரா வெளியே வந்தார். அவரது மேனேஜரையும் அதிகாரிகள் விடுவித்து விட்டனர்.
நயனதாராவின் பாங்காக் பயணம் குறித்துத்தான் விசாரணை நடந்துள்ளதாக தெரிகிறது. அவர் குறித்து யாரேனும் சுங்கத்துறையினருக்கு வேண்டும் என்றே தகவல் கொடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இருப்பினும் பிரபுதேவாவை காதலித்த காலத்தில் தனது கையில் பிரபுதேவா என்று பச்சை குத்தி வைத்திருந்தார் நயனதாரா. தற்போது அதை அழிக்க முடியாமல் கடுமையாக சிரமப்படுகிறார். இதற்காகவே அவர் பாங்காக் போயிருந்ததாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.
மொத்தத்தில் நயனதாராவுக்கு இந்த நாள் நிச்சயம் நல்ல நாளாக அமையாமல் கசப்பான நாளாக மாறி விட்டது உண்மை.