Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு வைத்த சிஎஸ்கே வீரர்.. டி20 உலககோப்பையில் சேர்க்க ரெய்னா கோரிக்கை
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கு: இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எனக்கு எப்பவுமே ‘ஜோ‘தான் பிடிக்கும்..மும்பை ரெஸ்டாரெண்டில் சூர்யா-ஜோதிகா!
மும்பை : மும்பை ரெஸ்டாரன்டில் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகாவுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
சூர்யா தற்போது பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் என்ற திரைப்படத்திலும், வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். அதே தனது தயாரிப்பு நிறுவனத்தில் மூலம் நல்ல கதைகளை தயாரித்து வருகிறார்.
சூர்யா பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருந்தாலும் ஜோவின் கணவராகவும், பொறுப்பான தந்தையாகவும் திகழ்ந்து வருகிறார்.
ஆசைப்பட்டா யோசிக்காம சாப்பிடணும்.. அப்புறம் அதை பண்ண மறந்துடக் கூடாது.. விஜய்சேதுபதியின் நச் பதில்!
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே...
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே...என் மீது எப்போது காதல் வந்தது" என்ற பாடல் சூர்யா ஜோதிகா ஜோடியின் காதலுக்காவே எழுதிய பாடலாகவே அமைத்துவிட்டது. 1999ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் படம் மூலம் காதல் வயப்பட்ட இந்த ஜோடி இன்று வரை அனைவருக்கும் பிடித்தமான ஜோடியாகவே இருக்கிறார்கள்
சில்லுனு ஒரு காதல் சூப்பர்
கோலிவுட்டில் இவர்கள் காதல் குறித்து கிசுகிசுக்கப்பட்டாலும், இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காக்க காக்க, பேரழகன், சில்லுனு ஒரு காதல் போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. சில்லுனு ஒரு காதல் படத்தில் இருவரும் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருப்பார்கள். சூர்யா ஜோதிகா ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் ஆள்டைம் பேவரைட் திரைப்படமாகும்.
சக்சஸ்ஃபுல் தம்பதிகள்
இதையடுத்து, பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு செப்டம்பர் 11, 2006... தமிழ்சினிமாவில் நட்சத்திரங்களாக ஜொலித்த காதல் ஜோடி சூர்யா- ஜோதிகா திருமண பந்தத்தில் இணைந்தனர். சூர்யா என்ற மூன்றெழுத்தும் ஜோதிகா என்ற மூன்றெழுத்தும் இணைந்து சக்சஸ்ஃபுல் தம்பதிகளாக திகழ்ந்த வருகின்றனர். இந்தத் தம்பதிக்கு 2007-ல் தியா 2010-ல் தேவ் என்ற இரண்டு சுட்டிகள் பிறந்தன.
2டி தயாரிப்பு நிறுவனம்
அதுமட்டும் இல்லாமல், நடிகர் சூர்யா, தனது காதல் மனைவி ஜோதிகா உடன் இணைந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்நிறுவனம் மூலம் தொடர்ந்து வித்தியாசமான படங்களை தயாரித்து வருகிறார். குறிப்பாக இவர்களது தயாரிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்தது.
‘ஜோ‘வுடன் சூர்யா
இந்த நிலையில் மும்பையில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்டில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகர் சூர்யா, ஒரு பான் இந்தியா திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இதற்காக அவர் தனது மனைவியுடன் மும்பை சென்றதாகவும் இந்த படம் குறித்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!