Don't Miss!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சிகரெட் பிடித்ததற்காக நடிகரை வெளுத்த அப்பா!
மும்பை : மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி, சிறைக்குச் சென்ற நடிகர் சஞ்சய் தத், 'பூமி' படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
ஓமங் குமார் இயக்கியுள்ள இப்படம் அப்பா-மகள் இடையேயான பாசப்போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது.
சஞ்சய் தத்தின் மகளாக 'காற்று வெளியிடை' நாயகி அதிதி ராவ் நடித்திருக்கிறார். சில வருடங்களுக்குப் பிறகு சஞ்சய் தத் நாயகனாக நடித்திருக்கும் 'பூமி' படம் வருகிற செப்டம்பர் 22-ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
இந்தப் படம் இந்த மாதம் ரிலீஸாக இருப்பதால் படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் சஞ்சய் தத். அப்படி அவர் ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது முதன்முதலில் தான் சிகரெட் பிடித்து தனது தந்தையிடம் மாட்டிக்கொண்ட விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார்.
'நான் பாத்ரூமில் சிகரெட் பிடிப்பதை என் அப்பா கண்டுபிடித்துவிட்டார். பின்னர் என்னைத் தனியாக ரூமிற்குள் அழைத்துக்கொண்டு போய் அடி வெளுத்து வாங்கிவிட்டார். சிகரெட் பிடிக்கக்கூடாது என்று அப்போது எனக்குத் தோன்றியது. ஆனாலும் மீண்டும் சிகரெட் புகைக்கத் துவங்கிவிட்டேன்' என்று கூறியுள்ளார் சஞ்சய் தத்.