Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
சிகரெட் பிடித்ததற்காக நடிகரை வெளுத்த அப்பா!
மும்பை : மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி, சிறைக்குச் சென்ற நடிகர் சஞ்சய் தத், 'பூமி' படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
ஓமங் குமார் இயக்கியுள்ள இப்படம் அப்பா-மகள் இடையேயான பாசப்போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது.
சஞ்சய் தத்தின் மகளாக 'காற்று வெளியிடை' நாயகி அதிதி ராவ் நடித்திருக்கிறார். சில வருடங்களுக்குப் பிறகு சஞ்சய் தத் நாயகனாக நடித்திருக்கும் 'பூமி' படம் வருகிற செப்டம்பர் 22-ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
இந்தப் படம் இந்த மாதம் ரிலீஸாக இருப்பதால் படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் சஞ்சய் தத். அப்படி அவர் ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது முதன்முதலில் தான் சிகரெட் பிடித்து தனது தந்தையிடம் மாட்டிக்கொண்ட விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார்.
'நான் பாத்ரூமில் சிகரெட் பிடிப்பதை என் அப்பா கண்டுபிடித்துவிட்டார். பின்னர் என்னைத் தனியாக ரூமிற்குள் அழைத்துக்கொண்டு போய் அடி வெளுத்து வாங்கிவிட்டார். சிகரெட் பிடிக்கக்கூடாது என்று அப்போது எனக்குத் தோன்றியது. ஆனாலும் மீண்டும் சிகரெட் புகைக்கத் துவங்கிவிட்டேன்' என்று கூறியுள்ளார் சஞ்சய் தத்.