Don't Miss!
- Automobiles ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
- Finance கூகுள் சுந்தர் பிச்சை எச்சரிக்கை.. கொத்து கொத்தா ஊழியர்கள் மீண்டும் பணிநீக்கம்..!
- News மட்டன், சிக்கன், பொங்கல், இட்லி, தோசை, வடை.. அங்கேயே சப்ளை ஆகுதா? ஆஹா, அதிமுக, திமுக, பாஜக செம பிஸி
- Technology நிலவை நோக்கி மீண்டும்-மீண்டும் படையெடுக்கும் ISRO.. முதல் இந்தியன் நிலவில் கால் பதிக்கும் வரை ஓயாது..
- Lifestyle குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
வாரிச் செல்லும் கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளம் தயாரிப்பாளர் மரணம்!
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இளம் தாயரிப்பாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது.
முடக்கிபோட்டுள்ள கொரோனா.. முதல்வரை நேரில் சந்தித்து ரூ. 25 லட்சம் வழங்கிய பிரபல இயக்குநர்!
இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனாவுக்கு பலி
கொரோனாவால் அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் என பலரும் பாரபட்சமின்றி பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர்.
பிரபலங்கள் பலி
தமிழ் சினிமாவில் கடந்த 2 மாதங்களில் ஏராளமான பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக கொரோனாவுக்கு பலரும் உயிரை விட்டுள்ளனர். தயாரிப்பாளர்கள் பாபு ராஜா, முத்துக்குமரன், இயக்குநர்கள் தாமிரா, கேவி ஆனந்த், தயாளன் ஆகியோர் கொரோனாவுக்கு பலியானார்கள்.
இளம் தயாரிப்பாளர்
மேலும் நடிகர்கள் பாண்டு, ஜோக்கர் துளசி, மாறன், பாடகர் கோமகன் ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் பிரபல இளம் தயாரிப்பாளர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
தயாரப்பாளர் கலைசெல்வன்
2019ஆம் ஆண்டு விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் சாருஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தாதா87. இந்தப் படத்தை இளம் தயாரிப்பாளர் கலைச்செல்வன் தயாரித்திருந்தார். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தொடரும் மரணங்கள்
இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருவது தமிழ் சினிமாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.