Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
மத்திய அரசு தடுக்கவில்லை... தமிழகம் தவிர பிற பகுதிகளில் 'டேம் 999'!
முல்லை பெரியாறு அணையால் தமிழக, கேரள மக்களுக்கு ஆபத்து என்றும், 30 லட்சம் தமிழர்கள் இறந்துவிடுவார்கள் என்றும் சித்தரிக்கும் வகையில் கேரள இயக்குனர் சோஹன் ராய் எடுத்த டேம் 999.
இந்தப் படத்துக்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. 100 ஆண்டு பழமையான இந்த அணையை உடைத்து புது அணை கட்ட வேண்டும் என்றும் இல்லையேல் அணை உடைந்து பேரழிவு ஏற்படும் என்றும் படத்தில் வலியுறுத்தப்பட்டுயுள்ளது.
அனைத்து கட்சி தலைவர்களும் இந்த படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்று வற்புறுத்தினர். இதையடுத்து தமிழக அரசு டேம் 999 படத்துக்கு தடை விதித்தது. இந்தியா முழுவதும் இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், உள்ளிட்ட கட்சிகள் வற்புறுத்தின. பிரதமருக்கும் கடிதம் எழுதப்பட்டது.
ஆனால் எதிர்ப்பை மீறி தமிழகம் தவிர இந்தியா முழுவதும் டேம் 999 படம் இன்று ரிலீசானது. இந்த படத்தின் முன்னோட்ட சிறப்பு காட்சியை மத்திய அரசின் பிலிம் டிவிஷன் நேற்று டெல்லியில் உள்ள திரைப்பட வர்த்தக சபையில் திரையிட்டது. பத்திரிகையாளர்களுக்காக இந்த சிறப்பு காட்சி திரையிடப்படுவதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.
பெரிய அணை, சிறிய அணை என இரு அணைகள் படத்தில் காண்பிக்கப்படுகின்றன. அணை பிடிப்பில் உள்ள மக்கள் மலையாளத்தில் பேசுகிறார்கள். புதிதாக கட்டப்படும் சிறிய அணை பலவீனமாக உள்ளது என கூறி அதற்கு திறப்பு விழா நடத்த மேயர் மறுத்து விடுகிறார். இதனால் பெரிய அணையில் உள்ள தண்ணீர் சிறிய அணையில் திறந்து விட மறுக்கப்படுகிறது.
திடீர் என புயல், நில நடுக்கம் ஏற்படுகிறது. இதில் மேல் அணை உடைந்து விடுகிறது. தண்ணீர் சீற்றத்தினால் இன்னொரு அணையும் உடைகிறது. இதில் ஏராளமானோர் உயிரிழக்கிறார்கள் என்பது போல் கதை உருவாக்கப்பட்டு உள்ளது. படத்துக்கு தடை விதிக்கும் படி தமிழகத்தில் இருந்து வந்த கோரிக்கைகள் மீது மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.
கேரளாவில் இந்த படம் இன்று பலத்த எதிர்ப்பார்ப்புடன் ரிலீஸ் ஆனது. அங்குள்ள ரசிகர்கள் படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டினார்கள். இதனால் படம் ரிலீசான அனைத்து தியேட்டர்களிலும் 'ஹவுஸ் புல்' காட்சிகளாக ஓடியது.
மீடியாவில் எழுந்த சர்ச்சைகள், தலைவர்களின் எதிர்ப்புகளே படத்துக்கு பெரிய விளம்பரமாக அமைந்ததால், சுமாரான இந்தப் படத்துக்கு எக்கச்சக்க வசூல் கிடைத்துவிட்டது முதல்நாளில்!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?