3 காதலிகள்: சமாளிக்க முடியாமல் ஆட்டோ டிரைவரிடம் திருடிய டான்ஸர்
Recommended Video

டெல்லி: டெல்லியில் 3 காதலிகளுக்கு செலவு செய்ய முடியாமல் திணறிய டான்ஸர் ஒருவர் ஆட்டோ டிரைவரின் பணத்தை திருடி போலீசில் சிக்கியுள்ளார்.
டெல்லியை சேர்ந்தவர் ரோஹன் கில்(21). நடன கலைஞர். கோவிந்த்புரி பகுதியில் வசித்து வரும் அவருக்கு 3 காதலிகள். இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு கோவிந்த்புரி சவுக் பகுதியில் சவாரிக்கு வந்த ஆட்டோ டிரைவர் பயணியை இறக்கிவிட்டுவிட்டு பணத்தை எண்ணியுள்ளார்.

அப்பொழுது அங்கு வந்த ரோஹன் ஆட்டோ டிரைவரின் பர்ஸை பறித்துக் கொண்டு ஓடினார். இதை பார்த்த ஆட்டோ டிரைவர் கூச்சலிடவே ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் ரோஹனை விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.
ரோஹனிடம் இருந்து ஆட்டோ டிரைவரின் பர்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ரூ. 1,900 ரொக்கம் இருந்தது. விசாரணையில் ரோஹன் கூறியதாவது, எனக்கு 3 காதலிகள் உள்ளனர். அவர்களுக்கு செலவு செய்ய பணம் போதவில்லை. அதனால் திருடத் துவங்கினேன் என்றார்.
கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரை 4 முறை கைது செய்யப்பட்டுள்ளார் ரோஹன் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











